திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1678 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சீல குணம் சத் கார்ய வாதம் கொண்டு அறிய வேண்டும்படியாய் இருக்கும் –அங்கு பிரமாணங்கள் சொல்ல அறியும் இத்தனை – இங்கு எத்தனையேனும் தாழ்ந்தாருக்கும் முகம் கொடுத்துக் கொண்டு நிற்கிற நிலையைக் கண்ணாலே காண்கையாலே அது ஸ்பஷ்டம் ஆவது இங்கே யாயிற்று – கோல்களிலும் பணை களிலும் வைத்த மதுவை பானம் பண்ணக் கடவ உன்னை சர்வரச -என்கிற வஸ்துவைப் போய் அனுபவி என்று அன்றோ சொல்கிறது – ஸ்வாபதேசம்-சப்தாதி விஷய நிச்சாரதையும் –-பகவத் அனுபவ நிரதிசய சாரத்தையும் சிஷ்யருக்கு அறிவிக்கிறார்) 1 | விண்ணவர் தங்கள் பெருமான் திரு மார்வன்
மண்ணவ ரெல்லாம் வணங்கும் மலி புகழ் சேர்
கண்ண புரத் தெம்பெருமான் கதிர் முடி மேல்
வண்ண நறுந்துழாய் வந்தூதாய் கோல்தும்பீ –8-4-1 | பதவுரை Show / Hideகோல் தும்பி, Kool Thumbi - கொம்புகளில் திரிகின்றவண்டே! விண்ணவர் தங்கள் பெருமான், Vinnavar Thangal Perumaan - நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும் திரு மார்வன், Thiru Maarvan - பிராட்டியைத் திருமார்பிற் கொண்டவனும் மண்ணவர் எல்லாம் வணங்கும், Mannavar Ellam Vanangum - இந்நிலத்திலுள்ளார் எல்லாராலும் வணங்கப் படுபவனும் மலி புகழ் சேர், Mali Pugazh Ser - நிறைந்த கீர்த்தியை யுடையவனும் கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமான், Emperumaan - ஸ்வாமியினுடைய கதிர் முடிமேல், Kathir Mudimael - ஒளிபொருந்திய திருமுடியின் மீதுள்ள வண்ணம் நறு துழாய், Vannam Naru Thuzhai - அழகியதும் மணத்ததுமான திருத்துழாயைக் கொண்டு வந்து, Vandhu - இங்கே வந்து ஊதாய், Oodhai - நீ ஊது. |