திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1681 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1681பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (எல்லாருக்கும் மேல் விழுந்து பற்ற வேண்டும்படியான வடிவை உடையனுமாய்க் கொண்டு ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே நிற்கிற ஸ்ரீ சர்வேஸ்வரனை அன்றோ பற்றச் சொல்லுகிறது) 4
நீர் மலிகின்றதோர் மீனாய் ஓர் ஆமையுமாய் சீர் மலின்ற தோர் சிங்க வுருவாகிக் கார்மலி வண்ணன் கண்ண புரத் தெம்பெருமான் தார்மலி தண்டுழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-4
பதவுரை Show / Hide
நீர்மலிகின்றது, Neermalikinrathu - ஸமுத்ரத்திலே வியாபித்த (- (கோல் தும்பீ-) (கண்ணபுரத் தெம்பெருமானுடைய-;))
ஓர் மீன் ஆய், Oru Meen Aayi - அத்விதீயமான மத்ஸ்யாவதாரமெடுத்தவனும்
ஓர் ஆமையும் ஆய், Oru Aamaiyum Aayi - விலக்ஷணமான கூர்மாவதார மெடுத்தவனும்
சீர் மலிகின்றது ஓர் சிங்கம் உரு ஆகி, Seer Malikinrathu Oru Singam Uru Aagi - சீர்மை மிகுந்த நரஸிம்ஹாவதார மெடுத்தவனும்
கார் மலி வண்ணன், Kaar Mali Vannan - மேகத்திற்காட்டிலும் சிறந்த வடிவு பெற்றவனுமான
தார், Thaar - மாலையிலே
மலி, Mali - பொருந்திய
தண், Than - குளிர்ந்த
துழாய், Thuzhai - திருத்துழாயிலே
தாழ்ந்து, Thaazhnthu - தாமதித்திருந்து
ஊதாய், Oodhai - (வந்து) ஊது.