திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1684 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1684பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷணத்துக்கு தனி மாலை இட்டு இருக்கையாலே வளைத்து கார்யம் கொள்ளலாம் படி இருக்குமவன் – அழகாலே நாட்டை வெருட்டித் திரிகிற காமனுக்கும் கூட உத்பாதகன் – மாலையாய் பரிமளிதமான திருத் துழாயிலே தாழ்ந்து இங்கே வந்தூதாய்) 7
வாமனன் கற்கி மதுசூதனன் மாதவன் தார் மன்னு தாசரதியாய தட மார்வன் காமன் தன தாதை திருக் கண்ண புரத் தெம்பெருமான் தாம நறுந்துழாய் தாழ்ந்தூதாய் கோல்தும்பீ –8-4-7
பதவுரை Show / Hide
வாமநன், Vaamanan - வாமநாவதாரஞ் செய்தவனும் (- (கண்ணபுரத்தெம்பெருமானுடைய-;) (தாழ்ந்து ஊதாய் கோல் தும்பீ!-.))
கற்கி, Karkki - கல்கியவதாரம் செய்யப் போகிறவனும்
மது சூதன், Madhu Soothan - மதுவென்னு மசுரனைக் கொன்றவனும்
மாதவன், Madhavan - திருமகள் கொழுநனும்
தார் மன்னு, Thar Mannu - (ரக்ஷகத்வஸூசகமான) மாலை பொருந்திய
தட மார்வன், Thada Marvan - பெரிய திருமார்பையுடையவனும்
தாசரதி ஆய, Dasarathi Aaya - தசரத புத்ரனாகத் திருவவதரித்தவனும்
காமன் தன் தாதை, Kaman Than Thathai - மன்மதனுக்குத் தந்தையுமான
தாமம், Thamam - மாலையிலுள்ள
நறு, Naru - பரிமளம் மிக்க
துழாய், Thuzhai - திருத்துழாயில்