திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1687 | பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் – என்கிறார் பத்தாம் பாசுரத்தில் இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும்) 10 | வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன்
கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை
கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத்
தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ –8-4-10 | பதவுரை Show / Hideவண்டு அமரும் சோலை, Vandu Amarum Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடையதும் (- (கோல் தும்பீ!-)) வயல், Vayal - கழனிகளை யுடையதுமான ஆலி, Aali - திருவாலி யென்கிற நல் நாடன், Nal Naadan - நல்ல நாட்டுக்குத் தலைவரும் கண்ட சீர், Kanda Seer - பிரத்யக்ஷமான திருக்குணங்களையுடையவரும் வென்றி, Vendri - ஜயசீலருமான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி, Oli - அருளிச்செய்த மாலை, Maalaik - இச்சொல் மாலையைக் கொண்டு, கொண்டல் நிறம் வண்ணன், Kondal Niram Vannaan - மேகத்தின் நிறம்போன்ற நிறத்தையுடையனான கண்ண புரத்தானை, Kanna Puraththaanai - திருக்கண்ணபுரத் தெம்பெருமானை தொண்டரோம், Thondarom - அடியோங்கள் பாட, Paada - பாடும்படியாக நினைந்து, Ninaindhu - நீ நெஞ்சிற்கொண்டு ஊதாய், Oodhai - ஊதவேணும். |