திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1687 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1687பெரிய திருமொழி || (8-4–விண்ணவர் தங்கள்) (திரு கண்ணபுரம் 4) - (கோல்தும்பி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சேஷ பூதரான நாங்கள் இவற்றைக் கொண்டு பாடும்படியாக நீ உன் ஹிருதயத்திலே கொண்டு அவன் பக்கலிலே அறிவித்து எங்களுக்கு அவன் முகம் தரும்படி பண்ணி எங்கள் குறையைத் தீர்க்கப் பாராய் – என்கிறார் பத்தாம் பாசுரத்தில் இவர் ஒருவரும் ஆஸ்வஸ்தர் ஆகவே எல்லாரும் ஆஸ்வஸ்தர் காணும்) 10
வண்டமரும் சோலை வயலாலி நன்னாடன் கண்ட சீர் வென்றிக் கலியன் ஒலி மாலை கொண்டல் நிற வண்ணன் கண்ண புரத்தானைத் தொண்டரோம் பாட நினைந்தூதாய் கோல்தும்பீ –8-4-10
பதவுரை Show / Hide
வண்டு அமரும் சோலை, Vandu Amarum Solai - வண்டுகள் படிந்த சோலைகளையுடையதும் (- (கோல் தும்பீ!-))
வயல், Vayal - கழனிகளை யுடையதுமான
ஆலி, Aali - திருவாலி யென்கிற
நல் நாடன், Nal Naadan - நல்ல நாட்டுக்குத் தலைவரும்
கண்ட சீர், Kanda Seer - பிரத்யக்ஷமான திருக்குணங்களையுடையவரும்
வென்றி, Vendri - ஜயசீலருமான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி, Oli - அருளிச்செய்த
மாலை, Maalaik - இச்சொல் மாலையைக் கொண்டு,
கொண்டல் நிறம் வண்ணன், Kondal Niram Vannaan - மேகத்தின் நிறம்போன்ற நிறத்தையுடையனான
கண்ண புரத்தானை, Kanna Puraththaanai - திருக்கண்ணபுரத் தெம்பெருமானை
தொண்டரோம், Thondarom - அடியோங்கள்
பாட, Paada - பாடும்படியாக
நினைந்து, Ninaindhu - நீ நெஞ்சிற்கொண்டு
ஊதாய், Oodhai - ஊதவேணும்.