திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1689 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (புறம்பு உள்ளார் ஒருவரும் இல்லை யாயிற்று –அகவாய் குடி போயிற்று – நாயகனோ வந்து அணைகிறிலன்- இனி எத்தைச் செய்வது) 2 | மாரி மாக்கடல் வளை வணர்க்கு இளையவன் வரை புரை திரு மார்பில்
தாரின் ஆசையில் போயின நெஞ்சமும் தாழ்ந்த தோர் துணை காணேன்
ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது ஒளியவன் விசும்பு இயங்கும்
தேரும் போயிற்றுத் திசைகளும் மறைந்தன செய்வது ஓன்று அறியேனே –8-5-2 | பதவுரை Show / Hideமாரி, Maari - மேகம்போன்றவனும் மா கடல், Maa Kadal - நீலக்கடல் போன்றவனும் வளை வணற்கு இளையவன், Valai Vanarku Ilaiyavan - சங்குபோன்ற (வெளுத்த) நிறமுடையனான பலராமனுக்குப் பின் பிறந்தவனுமான கண்ணபிரானுடைய வரை புரை, Varai Purai - மலைபோன்ற திரு மார்வில், Thiru Marvil - திருமார்பிலுள்ள தாரின், Tharin - மாலையினிடத்து ஆசையின், Aasaiyin - ஆசையினால் போயின, Poyin - என்னைவிட்டு நீங்கின நெஞ்சமும், Nenjamum - மனமும் தாழ்ந்தது, Thaanthathu - மீண்டுவரத் தாமதித்தது; (அவனிடத்திலேயே கால் தாழ்ந்துவிட்டது.) ஓர் துணை காணேன், Oor Thunai Kaanen - உதவியான ஒருவரையுங் காண்கின்றிலேன்; ஊரும் துஞ்சிற்று, Oorum Thunjirru - ஊரிலுள்ளாரும் உறங்கினார்கள்; உலகமும் துயின்றது, Ulagamum Thuyinrrathu - உலகங்களும் உறங்கின; விசும்பு, Visumbu - ஆகாசத்திலே இயங்கும், Iyankum - ஸஞ்சரிக்கின்ற ஒளியவன் தேரும், Oliyavan Therum - ஸூர்யனது தேரும் போயிற்று, Poyitru - மறைந்து போயிற்று; திசைகளும், Thisaigalum - திக்குக்களும் மறைந்தன, Maraindhana - தெரியவில்லை; செய்வது ஒன்று அறியேன், Seivathu Onru Ariyeen - (இந்நிலையில்) செய்யத்தக்கது ஒன்றுமறிகின்றிலேன். |