திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1690 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1690பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவ்வளவிலே வாராதே இரான் என்கிற நெஞ்சையும் அழித்து கொடு வந்து தோற்றா நின்றதாயிற்று இடையன் ஊதுகிற குழல் –பிராமணர் ஊதுகிற குழலுக்கு அகப்படாள் காணும் இவள் – மாஸூச -என்பார் ஒருவரையும் காண்கிறதில்லை) 3
ஆயன் மாயமே யன்றி மற்றென் கையில் வளைகளும் இறை நில்லா பேயினார் உயிர் உண்டிடும் பிள்ளை நம் பெண் உயிர்க்கு இரங்குமோ தூய மா மதிக் கதிர் சுடத் துணை யில்லை யிணை முலை வேகின்றதால் ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும் அஞ்சல் என்பார் இல்லையே –8-5-3
பதவுரை Show / Hide
ஆயன், Aayan - கண்ணபிரானுடைய
மாயமே அன்றி மற்று என்?, Maayame Anri Matru En - வஞ்சனை தவிர வேறு என்ன இருக்கிறது? (ஒன்றுமில்லை)
வளைகளும், Valaigalum - வளைகளும்
கையில் இறை நில்லா, Kaiyil Irai Nillaa - கையில் க்ஷணகாலமும் தங்குவதில்லை;
பேயினார், Peyinaar - பேய்ச்சியாகிய பூதனையினுடைய
உயிர், Uyir - பிராணனை
உண்டிடும் பிள்ளை, Undidum Pillai - உண்டு அவளை முடித்த பிள்ளை
நம் பெண் உயிர்க்கு, Nam Pen Uyirkkum - (அவளைப்போல்) பெண்ணாய்ப் பிறந்த நம்முடைய பிராணனுக்கு
இரங்குமோ, Irangumo - தயை பண்ண ப்ரஸக்தி யுண்டோ?
தூய மா மதி, Thuya Maa Mathi - மறுவற்ற சந்திரனுடைய
கதிர், Kathir - கிரணங்கள்
சுட, Suda - தஹிப்பதனாலே
இணை முலை, Inai Mulai - இரண்டு முலைகளும்
வேகின்றது, Veingirathu - தீப்பற்றி யெரிகி்ன்றன;
ஆல், Aal - அந்தோ! ;
துணை இல்லை, Thunai Illai - (எரியும் நெருப்பையவிக்கத்) துணையாவாரில்லை;
உள்ளமும், Ullamum - மனமும்
ஆயன், Aayan - கண்ணபிரானுடைய
வேயினுக்கு, Veiyinukku - வேய்ங்குழலுக்கு ஈடுபட்டு
அழிகின்றது –, Azhikindrathu - மாய்கின்றது;
அஞ்சேல், Anjael - ‘பயப்படாதே’ என்று அபயமளிப்பாராருமில்லையே.