திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1691 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1691பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ரஷகன் ஆனவன் இவ்வளவில் வந்து உதவிற்றிலன் பாதக பதார்த்தம் தானே இனிக் கிருபை பண்ணி மீளில் நான் எனக்கு உரியேனாய் இருக்கலாம்) 4
கயம் கொள் புண் தலை களிறு உந்து வெந்திறல் கழல் மன்னர் பெறும் போரில் மயங்க வெண் சங்கம் வாய் வைத்த மைந்தனும் வந்திலன் மறி கடல் நீர் தயங்கு வெண் திரைத் திவலை நுண் பனி எனும் தழல் முகந்து இள முலை மேல் இயங்கு மாருதம் விலங்கில் என்னாவியை எனக்கெனப் பெறலாமே –8-5-4
பதவுரை Show / Hide
கயம் கொள் புண் தலை, Kayam Kol Pun Thalai - (சீயும் ரத்தமும்) தடாகம் போலே வற்றாதிருக்கிற புண்கள் நிரம்பிய தலையையுடைய
களிறு, Kaliru - யானைகளை
உந்து, Undhu - தள்ளி நடத்தவல்ல
வெம் திறல், Vem Thiral - வெவ்விய வலிமையை யுடையவரும்
கழல், Kazhal - வீரக்கழலையுடையருமான
மன்னர், Mannar - அரசர்களினுடைய
பெரும் போரில், Perum Poril - பெரிய பாரத யுத்தத்தில்
மயங்க, Mayangka - அறிவுகலங்கும்படி
வெண் சங்கம், Ven Sangam - வெளாதத பாஞ்சஜந்யத்தை
வாய் வைத்த, Vaai Vaiththa - திருப்பவளத்தில் வைத்து ஊதின
மைந்தனும், Mainthanum - மஹா புருஷனும்
வந்திலன், Vandhilan - (என்னிடம்) வந்து சேர்ந்தானில்லை;
மறிகடல், Marikadal - அலைமடிகின்ற கடலினுடைய
நீர், Neer - ஜலத்ததில்
தயங்கு, Thayangku - அசைந்து வருகின்ற
வெண் திரை, Ven Thirai - வெண்மையான அலைகளாலுண்டான
திவலை, Thivalai - திவலைகளாகிற
நுண் பனி எனும், Nun Pani Enum - நுட்பமான பனியென்று சொல்லப்படுகிற
தழல், Thazhal - நெருப்பை
முகந்து, Mugandhu - வாரிக்கொண்டுவந்து
இள முலை மேல், Ila Mulai Mel - (எனது) இளமைதங்கிய முலைகளின் மீது
இயங்கு, Iyangu - வீசுகின்ற
மாருதம், Marudham - காற்றானது
விலங்கில், Vilankil - தணியப்பெற்றால்
என் ஆவியை, En Aaviyai - எனது உயிரை
எனக்கு என பெறலாம், Enakku En Peralaam - எனக்கு உரித்தாக அடையலாகும்.