திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1692 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நமக்கு அவன் பண்ணின அருளோடு கூட அதினுடைய பல ரூபமான பகலும் போய் நின்றதாயிற்று – அருள் போகவே பகலும் போம் இறே) 5 | ஏழு மா மரம் துளை படச் சிலை வளைத்து இலங்கையை மலங்குவித்த
ஆழியான் நமக்கு அருளிய அருளொடும் பகல் எல்லை கழிகின்றதால்
தோழி நாம் இதற்கு என் செய்தும் துணை இல்லை சுடர் படு முது நீரில்
ஆழ வாழ்கின்ற வாவியை யடுவதோர் அந்தி வந்து அடைகின்றதே –8-5-5 | பதவுரை Show / Hideஏழு மா மரம், Ezhu Maa Maram - ஸப்தஸால வ்ருக்ஷங்கள் துளைபட, Thulaipada - (ஸுக்ரீவனுடைய நம்பிக்கைக்காகத்) துளைபடும்படி சிலை, Silai - வில்லை வளைத்து, Valaiththu - வளைத்தவனும், இலங்கையை, Ilankaiyai - லங்காபுரியை மலங்குவித்த, Malanguviththa - கலங்கப்பண்ணினவனுமான ஆழியான், Aazhiyaan - அறுகாழி மோதிரத்தைக் கை யிலேயுடைய இராமபிரான் நமக்கு அருளிய அருளொடும், Namakku Aruliya Arulodum - நம் விஷயத்திற் பண்ணின கிருபையோடுகூட பகல் எல்லை கழிகின்றது, Pagal Ellai Kazhikinrathu - பகற்போதும் முடிந்து போகாநின்றது; ஆல், Aal - அந்தோ! ; தோழி, Thozhi - வாராய் தோழீ! ; இதற்கு நாம் என் செய்தும், Idharku Naam En Seiththum - இந்த ஆபத்துக்கு நாம் என்ன பரிஹாரம் செய்யவல்லோம்! ; துணை இல்லை, Thunai Illai - துணைநிற்பார் ஆருமில்லை; சுடர், Sudhar - ஸூரியனானவன் படு, Padu - தான் தோன்றின முது நீரில், Muthu Neeril - ஸமுத்ரத்தினுள் ஆழ, Aazha - ஆழ்ந்து மறைந்துபோக, வாழ்கின்ற ஆவியை அடுவது, Vazhkindra Aaviyai Adhuthal - பிழைத்திருக்க நினைத்திருக்கின்ற பிராணனை முடிப்பதான ஓர் அந்தி, Oru Andhi - ஒரு ஸாயம்ஸந்த்யாகாலமானது வந்து அடை கின்றதே, Vandhu Adai Kinrathae - வந்து சேர்கின்றதே!. |