திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1694 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1694பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் முடியவே அவனைக் கிடையாது – அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம் ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன்) 7
கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம் மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால் இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன் விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே –8-5-7
பதவுரை Show / Hide
மா கடல், Maa Kadal - பெரிய கடலானது
கலங்க, Kalanga - கலங்கும்படியாக
கடைந்து, Kadaindhu - (அதனைக்) கடைந்தவனும்
அடைந்து, Adaindhu - (அக்கடலில்) அணை கட்டினவனும்
இலங்கையர் கோனது, Ilankaiyar Konathu - இலங்கையிலுள்ளார்க்கு அரசனான இராவணனுடைய
வரை ஆகம், Varai Aagam - மலைபோன்ற மார்பானது
மலங்க, Malanga - வியாகுலப்படும்படி
வெம் சமத்து, Vem Samathu - கொடியபோரில்
அடு சரம், Adu Saram - கொலையம்புகளை
துரந்த, Thurandha - பிரயோகித்தவனுமான
எம் அடிகளும், Em Adigalum - எமது ஸ்வாமியும்
வாரான், Varaan - வரவில்லை;
ஆல், Aal - அந்தோ! ;
இலங்கு, Ilangu - விளங்காநின்ற
வெம் கதிர், Vem Kathir - கடூரமான கிரணங்களையுடைய
இள மதி அதனொடும், Ila Mathi Adhanodum - இளம் சந்திரனோடு கூட
விடை, Vidai - எருதினுடைய
மணி, Mani - (கழுத்தில் கட்டின மணியின்) ஓசையும்
அடும், Adum - (என்னைக்) கொலை செய்கின்றது;
ஆயன், Aayan - இடையனான கண்ணபிரானிடத்துள்ள
விலங்கல் வேயினது, Vilangal Veiyinathu - மலை மூங்கிற்குழலினுடைய
ஓசையும், Osaiyum - த்வநியும்
ஆய், Aai - உண்டாக,
இனி விளைவது ஒன்று அறியேன், Ini Vilaiyvadhu Ondru Ariyeen - இனி உண்டாகப்போகும் ஆபத்தை ஒன்று மறிகின்றிலேன்.