திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1694 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நான் முடியவே அவனைக் கிடையாது – அவன் போகவே அவனால் நோக்கப் படும் விபூதி த்வயமும் இல்லையாம் ஆனபின்பு இது எவ்வளவாய் தலைக் கட்டும் என்று அறியேன்) 7 | கலங்க மாக்கடல் கடைந்து அடைத்து இலங்கையர் கோனது வரையாகம்
மலங்க வெஞ்சமத்து அடுசரம் துரந்த எம்மடிகளும் வாரானால்
இலங்கு வெங்கதிர் இள மதி யதனொடும் விடை மணி யடு மாயன்
விலங்கல் வேயின தோசையுமாயினி விளைவது ஓன்று அறியேனே –8-5-7 | பதவுரை Show / Hideமா கடல், Maa Kadal - பெரிய கடலானது கலங்க, Kalanga - கலங்கும்படியாக கடைந்து, Kadaindhu - (அதனைக்) கடைந்தவனும் அடைந்து, Adaindhu - (அக்கடலில்) அணை கட்டினவனும் இலங்கையர் கோனது, Ilankaiyar Konathu - இலங்கையிலுள்ளார்க்கு அரசனான இராவணனுடைய வரை ஆகம், Varai Aagam - மலைபோன்ற மார்பானது மலங்க, Malanga - வியாகுலப்படும்படி வெம் சமத்து, Vem Samathu - கொடியபோரில் அடு சரம், Adu Saram - கொலையம்புகளை துரந்த, Thurandha - பிரயோகித்தவனுமான எம் அடிகளும், Em Adigalum - எமது ஸ்வாமியும் வாரான், Varaan - வரவில்லை; ஆல், Aal - அந்தோ! ; இலங்கு, Ilangu - விளங்காநின்ற வெம் கதிர், Vem Kathir - கடூரமான கிரணங்களையுடைய இள மதி அதனொடும், Ila Mathi Adhanodum - இளம் சந்திரனோடு கூட விடை, Vidai - எருதினுடைய மணி, Mani - (கழுத்தில் கட்டின மணியின்) ஓசையும் அடும், Adum - (என்னைக்) கொலை செய்கின்றது; ஆயன், Aayan - இடையனான கண்ணபிரானிடத்துள்ள விலங்கல் வேயினது, Vilangal Veiyinathu - மலை மூங்கிற்குழலினுடைய ஓசையும், Osaiyum - த்வநியும் ஆய், Aai - உண்டாக, இனி விளைவது ஒன்று அறியேன், Ini Vilaiyvadhu Ondru Ariyeen - இனி உண்டாகப்போகும் ஆபத்தை ஒன்று மறிகின்றிலேன். |