திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1695 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் – இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன்) 8 | முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்த
மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால்
ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித்
தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே –8-5-8 | பதவுரை Show / Hideஇ வையகம், I Vaiyagam - இந்த லோகமானது (- (வாரான் ஆல்-;)) முழுது, Muzhuthu - அடங்கலும் முறை கெட மறைதலும், Murai Keda Maraithalum - மரியாதை குலைந்து போனதனால் முனிவனும், Munivanum - ஜமதக்நி முனிவன் முனிவு எய்த, Munivu Eytha - சீற்றங்கொள்ள (அது காரணமாக) மழுவினால், Mazhuvinal - கோடாலிப்படையினால் மன்னர், Mannar - க்ஷத்ரியர்களினுடைய ஆர் உயிர், Aar Uyir - அருமையான பிராணன்களை வௌவிய, Vauviy - கவர்ந்த மைந்தனும், Mainthanum - மிடுக்கையுடைய (பரசுராம) பிரானும் ஒழுகு, Ozhugu - பெருகுகின்ற நுண் பனிக்கு, Nun Panikku - சிறுபனிக்காக ஒடுங்கிய, Odungiya - ஒடுங்கிவர்த்திக்கிற பேடையை, Pedaiai - பெண் பறவையை அம் சிறை கோலி, Am Sirai Koli - அழகிய சிறகுகளை விரித்து அடங்கத் தழுவும், Adangath Thazhuvum - நிபிடமாக அணைத்துக் கொள்வதற்குரிய நள்ளிருள், Nallirul - நடு நிசியில் தனிமையின், Thanimaiyin - (இப்படி) தனிமைப்பட்டிருப்பதிற்காட்டிலும் கடியது, Kadiyadhu - க்ரூரமான ஓர் கொடு வினை, Oru Kodu Vinai - வேறொருபாபத்தை அறியேன், Ariyeen - அறிகின்றிலேன். |