திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1695 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1695பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடியே அனுபவித்து அல்லது நசியாத படி க்ரூரமாய் இருப்பதொரு பாபம் உண்டாக அறிகிறிலேன் – இன்னம் இதில் காட்டில் நரகத்தில் போய் அனுபவிப்பதோர் அனுபவம் தான் உண்டாக அறிகிறிலேன்) 8
முழுது இவ்வையகம் முறை கெட மறைதலும் முனிவனும் முனிவெய்த மழுவினால் மன்னர் ஆர் உயிர் வவ்விய மைந்தனும் வாரானால் ஒழுகு நுண் பனிக்கு ஒடுங்கிய பேடையை யடங்க வஞ்சிறைக் கோலித் தழுவு நள்ளிருள் தனிமையில் கடியதோர் கொடு வினை அறியேனே –8-5-8
பதவுரை Show / Hide
இ வையகம், I Vaiyagam - இந்த லோகமானது (- (வாரான் ஆல்-;))
முழுது, Muzhuthu - அடங்கலும்
முறை கெட மறைதலும், Murai Keda Maraithalum - மரியாதை குலைந்து போனதனால்
முனிவனும், Munivanum - ஜமதக்நி முனிவன்
முனிவு எய்த, Munivu Eytha - சீற்றங்கொள்ள (அது காரணமாக)
மழுவினால், Mazhuvinal - கோடாலிப்படையினால்
மன்னர், Mannar - க்ஷத்ரியர்களினுடைய
ஆர் உயிர், Aar Uyir - அருமையான பிராணன்களை
வௌவிய, Vauviy - கவர்ந்த
மைந்தனும், Mainthanum - மிடுக்கையுடைய (பரசுராம) பிரானும்
ஒழுகு, Ozhugu - பெருகுகின்ற
நுண் பனிக்கு, Nun Panikku - சிறுபனிக்காக
ஒடுங்கிய, Odungiya - ஒடுங்கிவர்த்திக்கிற
பேடையை, Pedaiai - பெண் பறவையை
அம் சிறை கோலி, Am Sirai Koli - அழகிய சிறகுகளை விரித்து
அடங்கத் தழுவும், Adangath Thazhuvum - நிபிடமாக அணைத்துக் கொள்வதற்குரிய
நள்ளிருள், Nallirul - நடு நிசியில்
தனிமையின், Thanimaiyin - (இப்படி) தனிமைப்பட்டிருப்பதிற்காட்டிலும்
கடியது, Kadiyadhu - க்ரூரமான
ஓர் கொடு வினை, Oru Kodu Vinai - வேறொருபாபத்தை
அறியேன், Ariyeen - அறிகின்றிலேன்.