திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1697 | பெரிய திருமொழி || (8-5–தந்தை காலில்) (திரு கண்ணபுரம் 5) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திரு மொழியை அப்யசிக்க வல்லார் –பிரிவாற்றாமை கூப்பிடுவது தவிர்ந்து நித்ய விபூதியில் நித்ய சூரிகளோடே கூடி அஹம் அன்னம் அஹம் அன்னம் -என்கிறபடியே ஹர்ஷத்துக்கு போக்கு விட்டுக் கூப்பிட்டு பின்னை ஒரு காலும் புனராவ்ருத்தி இல்லாத பேற்றைப் பெறுவர்) 10 | வார் கொள் மென் முலை மடந்தையர் தடங்கடல் வண்ணனைத் தாள் நயந்து
ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை யறிந்து முன்னுரை செய்த
கார் கொள் பூம்பொழில் மங்கையர் காவலன் கலிகன்றி ஒலி வல்லார்
ஏர் கொள் வைகுந்த மா நகர் புக்கு இமையவரோடும் கூடுவரே –8-5-10 | பதவுரை Show / Hideவார் கொள், Vaar Kol - கச்சு அணிந்த மென் முலை, Men Mulai - மெல்லிய முலைகளையடைய மடந்தையர் அவர், Madandaiyar Avar - (திருவாய்ப்பாடியிலுள்ள) அப்பெண்கள் தட கடல் வண்ணன், Thada Kadal Vannan - பெரிய கடலின் நிறம் போன்ற நிற முடையனான கண்ணபிரானுடைய தாளை, Thaalai - திருவடிகளை நயந்து, Nayandhu - ஆசைப்பட்டு ஆர்வத்தால், Aarvaththal - அன்பினால் முன் புலம்பிய புலம்பலை, Mun Pulambiya Pulambalai - முன்பு கதறின கதறலை அறிந்து, Arindhu - உட்கொண்டு, கார் கொள் பை பொழில் மங்கையர் காவலன், Kaar Kol Pai Pozhil Mangaiyar Kaavalan - மேக ஸஞ்சாரத்தையுடைய பரந்தசோலைகளையுடைத்தான திருமங்கை நாட்டிலுள்ளார்க்குத் தலைவரான கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் உரைசெய்த, Uraichseitha - அருளிச் செய்த ஒலி, Oli - இச்சொற்களை வல்லார், Vallaar - ஓதியுரணவல்லவர்கள் ஏர்கொள், Aerkol - அழகிய வைகுந்தம் மா நகர், Vaikundham Maa Nagar - பரமபதமென்னுந் திருநாட்டிலே புக்கு, Pukku - புகுந்து இமையவரோடும், Imaiyavarodum - நித்யஸுரிகளோடே கூடுவர், Koodhuvar - சேரப்பெறுவர்கள். |