திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1698 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1698பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒண் டொடியாள் திரு மகளும் நீயுமே நிலா நிற்ப கண்ட சதிர் -என்னுமா போலே பிரஜைகளின் உடைய ரஷணத்துக்கு இவர்களும் தாமுமான சேர்த்தி உண்டாக வேணும் என்று பார்த்து வைத்தான் ஆயிற்று – அவனும் நாமும் இவர்களும் சேர வர்திக்கைக்கு ஏகாந்தமான ஸ்தலம் என்று உகந்த ஸ்ரீ திருக் கண்ண புரத்தை தொழுவோம்) 1
தொண்டீர் உய்யும் வகை கண்டேன் துளங்கா வரக்கர் துளங்கா முன் திண் தோள் நிமிரச் சிலை வளையச் சிறிதே முனிந்த திரு மார்பன் வண்டார் கூந்தல் மலர் மங்கை வடிக்கண் மடந்தை மா நோக்கும் கண்டான் கண்டுகொண்டுகந்த கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-1
பதவுரை Show / Hide
தொண்டீர், Thondheer - பகவத் கைங்கரியத்தில் ருசி யுடையீர்காள்! (- (இவர்களுடைய))
உய்யும் வகை, Uyum Vagai - உஜ்ஜீவிக்கும் வழியை
கண்டேன், Kandein - தெரிந்து கொண்டேன்;
முன், Mun - முற்காலத்தில்
துளங்கா அரக்கர், Thulanga Arakkar - ஒருநாளும் கஷ்டப்பட்டறியாத ராக்ஷஸர்கள்
துளங்க, Thulanga - கஷ்டப்படும்படியாக
திண் தோள் நிமிர, Thin Thol Nimira - வலிமை பொருந்திய திருத்தோள்கள் நிமிரவும்
சிலை வளைய, Silai Valaiya - வில்வளையவும்
சிறிதே முனிந்த, Siridhe Munintha - ஸ்வல்பமான சீற்றமே கொண்டவனாய்
திரு மார்பன், Thiru Maarban - லக்ஷ்மியைத் திருமார்பிலே உடையவனாய்,
வண்டு ஆர் கூந்தல் மலர் மங்கை, Vandu Aar Koondhal Malar Mangai - வண்டுகள் படிந்த கூந்தலையுடைய பெரிய பிராட்டியாரென்ன
வடி கண் மடந்தை, Vadi Kan Madanthai - கூர்மை பொருந்திய திருக்கண்களையுடைய பூமிப்பிராட்டியாரென்ன
மா நோக்கம் கண்டான், Maa Nokkam Kandan - சிறந்த கடைக்கண் பார்வையை அனுபவிப்பவனான எம்பெருமான்
கண்டு கொண்டு உகந்த, Kandu Konda Ugantha - (நித்யவாஸத்திற்குப் பாங்கான இடமென்று) திருவுள்ளம் பற்றி மகிழ்ந்து உறையுமிடமான
கண்ணபுரம், Kannapuram - திருக்கண்ணபுரத்தை
நாம் தொழுதும், Naam Thozhudum - நாம் தோழுவோம்