திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1699 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அது ஸ்ரீ பிராட்டி பக்கல் ஓரத்தால் செய்த செய்யல் அன்றோ – நாம் அதற்க்கு பிற்பாடர் ஆனோமே -என்ன அது வேண்டா -அவன் விரோதி நிரசன சீலன் -என்கிறார்) 2 | பொருந்தா வரக்கர் வெஞ்சமத்துப் போன்ற வன்று புள்ளூர்ந்து
பெரும் தோள் மாலி தலை புரளப் பேர்ந்த வரக்கர் தென்னிலங்கை
இருந்தார் தம்மை உடன் கொண்டு அங்கு எழிலார் பிலத்துப் புக்கு ஒழிப்பக்
கருந்தாட் சிலை கைக் கொண்டானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-2 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகாலத்தில், (- (கண்ணபுரம், நாம் தொழுதும்-.)) வெம் சமத்து, Vem Samathu - கொடிய போர்க்களத்திலே பொருத்தா அரக்கர், Poruththa Arakkar - சத்ருக்களான ராக்ஷஸர்கள் பொன்ற, Pondra - முடியும்படியாக புள் ஊர்ந்து, Pul Oornthu - கருடப் பறவையை ஏறி நடத்திக் கொண்டெழுந்தருளி பெரு தோள் மாலி, Peru Thol Maali - வலிய தோள்களையுடையனான மாலியினுடைய தலை, Thalai - தலையானது புரள, Purala - (அற்று விழுந்து நிலத்தில்) புரளும் படியாகவும் பேர்ந்த அரக்கர், Perntha Arakkar - அவனைத் தவிர மற்ற ராக்ஷஸர்கள் தென் இலங்கை இருந்தார் தம்மை உடன் கொண்டு, Then Ilangai Irundhaar Thammai Udhan Kondo - தென்னிலங்கையிலிருந்து மற்றுமுள்ள ராக்ஷஸர்களையுங் கூட்டிக்கொண்டு அங்கு, Angu - அவ்விடத்திலிருந்து எழில் ஆர்பிலத்து, Ezhil Aarbilathu - அழகிய பாதாளத்திலே புக்கு ஒளிப்ப, Pukku Olippa - புகுந்து மறையும்படியாகவும் கருந் தாள் சிலை, Karun Thaal Silai - வயிரம்பற்றித் திண்ணிதான வில்லை கை கொண்டான், Kai Kondaaan - திருக்கையிலே தரித்தவனான எம்பெருமானுடைய ஊர், Oor - இருப்பிடமான |