திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1700 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஸ்துதமான ஸ்ரீ ராமாவதாரம் பின்னாட்டின படி சொல்லுகிறது) 3 | வல்லி இடையாள் பொருட்டாக மதிள் நீர் இலங்கையார் கோவை
அல்லல் செய்து வெஞ்சமத்துள் ஆற்றல் மிகுத்த வாற்றலான்
வல்லாளரக்கர் குலப்பாவை வாட முனி தன் வேள்வியைக்
கல்விச் சிலையால் காத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-3 | பதவுரை Show / Hideவல்லி இடையாள் பொருட்டாக, Valli Idaiyaal Porutthaga - கொடிபோல் மெல்லிய இடையை யுடையளான ஸீதைக்காக, (- (ஊர், கண்ணபுரம், நாம் தொழுதும்-.)) நீர், Neer - கடலை அகழாகவுடையதாய் மதிள், Mathil - மதிள்களையுமுடைத்தான இலங்கையர், Ilangaiyar - லங்காபுரியிலுள்ள அரக்கர்களுக்கு கோவை, Kovai - தலைவனான இராவணனை அல்லல் செய்து, Allal Seidhu - துன்பப்படுத்தி வெம் சமத்துள், Vem Samaththul - வெவ்விய போர்க்களத்திலே ஆற்றல் மிகுந்த, Aatral Mikuntha - தன்னுடைய மிடுக்கை மிகவும் விளங்கக்காட்டின ஆற்றலான், Aatralan - மஹா வீரனும் வல் ஆள் அரக்கர், Val Aal Arakkar - வலிய ஆண்மைத்தனமுடைய ராக்ஷஸர்களின் குலம், Kulam - குலத்தில் தோன்றிய பாவை, Pavai - தாடகை யென்னும் அரக்கியை வாட, Vaada - முடிய (ச் செய்து) முனி தன், Muni Than - விச்வாமித்ர முனியினுடைய வேள்வியை, Velviyai - யாகத்தை கல்வி சிலையால், Kalvi Silaiyaal - தான் கற்றுப் பயின்ற வில்லைக் கொண்டு காத்தான், Kaaththaan - காத்தருளினவனுமான பெருமானுடைய |