திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1701 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1701பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீரிலே இட்டால் ஆழக் கடவ மலைகளைக் கொண்டு கடலை அடைத்த ஸ்ரீ சக்கரவர்த்தி திரு மகனுக்கு வாசஸ் ஸ்தானமான ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே) 4
மல்லை முந்நீர் அதர்பட வரி வெஞ்சிலை கால் வளைவித்துக் கொல்லை விலங்கு பணி செய்யக் கொடியோன் இலங்கை புகலுற்றுத் தொல்லை மரங்கள் புகப் பெய்து துவலை நிமிர்ந்து வான் அணவக் கல்லால் கடலை அடைத்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-4
பதவுரை Show / Hide
கொடியோன், Kodiyon - கொடியவனான இராவணனுடைய (- (அதற்காக) (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
இலங்கை, Ilankai - லங்காபுரியில்
புகல் உற்று, Pugal Utru - பிரவேசிக்கவேண்டி
மல்லை முந்நீர், Mallai Munnir - செழி்ப்பான கடலானது
அதர் பட, Adhar Pada - வழிபடும்படியாக
வரி வெம் சிலை, Vari Vem Silai - வரிகளை யுடையதாய் வெவ்வியதான வில்லை
கால் விளை வித்து, Kaal Vilai Viththu - வளையச்செய்து
கொல்லை விலங்கு, Kollai Vilangu - காட்டுமிருகங்கள் (வாநரமுதலிகள்)
பணி செய்ய, Pani Seyya - கைங்கரியம் பண்ண
தொல்லை மரங்கள், Thollai Marangal - பழைய மரங்களையும்
புகப் பெய்து, Pugap Peidhu - கடலினுட் புகும்படியாக வெட்டிப்போட்டு
துவலை, Thuvilai - திவலைகள்
நிமிர்ந்து, Nimirndhu - கிளர்ந்து
வான், Vaan - ஆகாசத்திலே
அணவ, Anava - அளாவும்படியாக
கல்லால், Kallal - மலைகளைக் கொண்டு
கடலை, Kadalai - ஸமுத்ரத்தை
அடைத்தான், Adaiththaan - அணைசெய்த எம்பெருமானுடைய