திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1702 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாதே ரஷிக்கும்-ஸ்வபாவன் -ஆயிற்று) 5 | ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம்
ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச்
சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன்
காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-5 | பதவுரை Show / Hideஆமை ஆகி, Aamai Aagi - கூர்மரூபியாயும் (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.)) அரி ஆகி, Ari Aagi - நரஸிம்ஹரூபியாயும் அன்னம் ஆகி, Annam Aagi - ஹம்ஸரூபியாயும் (அவதரித்தவனும்) அந்தணர் தம், Andhanar Tham - பிராமணர்களினுடைய ஓமம் ஆகி, Oomam Aagi - யாகங்களில் ஆராதிக்கப்படுமவனும் ஊழி ஆகி, Oozhi Aagi - பிரளயகாலத்திலு முள்ளவனும் நெடு புணரி, Nedu Punari - ஓங்கின அலைகளையுடைத்தான உவரி, Uvari - கடலினால் சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்டதும் சேமம் மதிள் சூழ், Semam Mathil Sozh - காப்பான மதிள்களாலே சூழப்பட்டதுமான இலங்கை, Ilankai - லங்காபுரிக்கு கோன், Koon - தலைவனான இராவணனுடைய சிரமும், Siramum - தலைகளையும் கரமும், Karumum - தோள்களையும் துணித்து, Thuniththu - அறுத்தொழித்தவனும், முன், Mun - முன்பொருகால் காமன், Kaaman - மன்மதனை பயந்தான், Payandhaan - பிள்ளையாகப் பெற்றவனுமான எம்பெருமான் கருதும், Karudum - திருவுள்ளம் பற்றியிருக்கப்பெற்ற |