திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1702 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1702பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஆஸ்ரித ரஷணம் ஒரு தலையானால் தன்னைப் பேணாதே ரஷிக்கும்-ஸ்வபாவன் -ஆயிற்று) 5
ஆமையாகி யரியாகி அன்னமாகி அந்தணர் தம் ஓமமாகி ஊழியாகி உவரி சூழ்ந்த நெடும் புணரிச் சேம மதிள் சூழ் இலங்கைக் கோன் சிரமும் கரமும் துணித்து முன் காமன் பயந்தான் கருதுமூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-5
பதவுரை Show / Hide
ஆமை ஆகி, Aamai Aagi - கூர்மரூபியாயும் (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
அரி ஆகி, Ari Aagi - நரஸிம்ஹரூபியாயும்
அன்னம் ஆகி, Annam Aagi - ஹம்ஸரூபியாயும் (அவதரித்தவனும்)
அந்தணர் தம், Andhanar Tham - பிராமணர்களினுடைய
ஓமம் ஆகி, Oomam Aagi - யாகங்களில் ஆராதிக்கப்படுமவனும்
ஊழி ஆகி, Oozhi Aagi - பிரளயகாலத்திலு முள்ளவனும்
நெடு புணரி, Nedu Punari - ஓங்கின அலைகளையுடைத்தான
உவரி, Uvari - கடலினால்
சூழ்ந்த, Sozhndha - சூழப்பட்டதும்
சேமம் மதிள் சூழ், Semam Mathil Sozh - காப்பான மதிள்களாலே சூழப்பட்டதுமான
இலங்கை, Ilankai - லங்காபுரிக்கு
கோன், Koon - தலைவனான இராவணனுடைய
சிரமும், Siramum - தலைகளையும்
கரமும், Karumum - தோள்களையும்
துணித்து, Thuniththu - அறுத்தொழித்தவனும்,
முன், Mun - முன்பொருகால்
காமன், Kaaman - மன்மதனை
பயந்தான், Payandhaan - பிள்ளையாகப் பெற்றவனுமான எம்பெருமான்
கருதும், Karudum - திருவுள்ளம் பற்றியிருக்கப்பெற்ற