திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1704 | பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ராவணன் பண்ணின பிராதி கூல்யம் தம்பி அளவாக வந்தேறுவதாக இருக்கச் செய்தேயும் அத்தைப் பாராதே அவன் தம்பிக்கு ராஜ்யத்தை கொடுத்தான் ஆயிற்று –அதுக்கு முன்பு தமையனுடைய வைரத்துக்கு ஹேதுவாய்க் கொண்டு வந்த மாயா மிருகத்தை ஓர் அம்பாலே முடித்தவன்) 7 | இலையார் மலர்ப் பூம் பொய்கை வாய் முதலை தன்னால் அடர்ப்புண்டு
கொலையார் வேழம் நடுக்குற்றுக் குலைய வதனுக்கு அருள் புரிந்தான்
அலைநீர் இலங்கைத் தசக்ரீவற்கு இளையோருக்கு அரசை அருளி முன்
கலைமாச் சிலையால் எய்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-7 | பதவுரை Show / Hideகொலை ஆர் வேழம், Kolai Ar Vezham - (கஜேந்திராழ்வான்) கொலைத் தொழிலை இயற்கையாக வுடைய யானை (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.)) இலை ஆர், Ilai Ar - இலைகள் நிரம்பிய மலர், Malar - மலர்களையுடைத்தான பூ, Poo - அழகிய பொய்கை வாய், Poykai Vaai - தடாகத்திலே முதலை தன்னால், Muthalai Thannal - முதலையினால் அடர்ப்புண்டு, Adarppundhu - துன்பமடைந்து கடுக்குற்று, Kadakku Kutral - நடுங்கி குலைய, Kulaiya - கையோய்ந்து நிற்க, அதனுக்கு, Adhanukku - அவ்யானைக்கு அருள் புரிந்தான், Arul Purindhaan - கிருபைபண்ணி யருளினவனும், அலை நீர் இலங்கை, Alai Neer Ilangai - கடல் சூழ்ந்த இலங்கைக்குத் தலைவனான தசக்ரீவற்கு, Dasakreevarukku - இராவணனுடைய இளையோற்கு, Ilaiyorukku - தம்பியான விபீஷணனுக்கு அரசை அருளி, Arasai Aruli - லங்காராஜ்யத்தைக் கொடுத்தருளினவனும் முன், Mun - அதற்கு முன்பே கலைமா, Kalaimaa - (மாரீசனாகிற) மானை சிலையால், Silaigal - ஒரு வில்லாலே எய்தான், Eydhaan - அம்பெய்து கொன்றவனுமான பெருமானுடைய தசக்கிரீவன், Dasakreevan - வடசொல் விகாரம். |