திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1706 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1706பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (மலையை எடுத்து இந்த்ரன் வியாபாரம் வ்யர்த்தமாம் படி பண்ணி கொடி போலே அழகிய இடையை உடைய ஸ்ரீ நப்பின்னை பிராட்டிக்காக வலிய தாளை உடைய ருஷபங்கள் ஏழையும் அழியச் செய்த – ஸ்ரீ கண்ண புரம் நாம் தொழுதுமே) 9
குன்றால் மாரி பழுதாக்கிக் கொடியேர் இடையாள் பொருட்டாக வன் தாள் விடை ஏழு அன்று அடர்த்த வானோர் பெருமான் மா மாயன் சென்றான் தூது பஞ்சவர்க்காய்த் திரிகால் சகடம் சினம் அழித்துக் கன்றால் விளங்காய் எறிந்தானூர் கண்ண புரம் நாம் தொழுதுமே –8-6-9
பதவுரை Show / Hide
குன்றால், Kundraal - கோவர்த்தன மலையினால் (- (ஊர், கண்ணபுரம் நாம் தொழுதும்-.))
மாரி, Maari - பெருமழையை
பழுது ஆக்கி, Pazhuthu Aakki - பயனற்றதாம்படி செய்தவனும்
அன்று, Andru - முன்பொருகால்,
கொடி ஏர் இடையாள் பொருட்டாக, Kodi Aer Idaiyaal Porutthaga - கொடிபோன்று அழகிய இடையை யுடையளான நப்பின்னைப் பிராட்டிக்காக
வல் தாள் ஏழ் விடை, Val Thaal Ezh Vidai - வலிய கால்களையுடைய ஏழு ரிஷபங்களை
அடர்த்த, Adarttha - வலியடக்கினவனும்
வானோர் பெருமான், Vaanor Perumaan - நித்யஸூரிகளுக்குத் தலைவனும்
மா மாயன், Maa Maayan - ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனும்
பஞ்சவர்க்கு ஆய், Panchavarkku Aay - பஞ்சபாண்டவர்களுக்காக
தூது சென்றான், Thoodhu Senraan - (துரியோதனன் பக்கல்) தூது சென்றவனும்
திரி கால் சகடம், Thiri Kaal Sakadham - ஊர்ந்து செல்லுங்காலையுடைய சகடத்தின்
சினம், Sinam - பகையை
அழித்து, Azhiththu - அழித்தவனும்
கன்றால், Kanraal - வத்ஸாஸுரனைக் கொண்டு
விளங்காய் எறிந்தான், Vilangaai Erindhaan - கபித்தாஸுரன்மேல் வீசியெறிந்து இருவரையும் முடித்தவனுமான பெருமானுடைய