திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1707 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1707பெரிய திருமொழி || (8-6–தொண்டீர்) (திரு கண்ணபுரம் 6) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இத் திரு மொழியை வல்லார் –பௌமம் மநோ ரதம் ஸ்வர்க்க்யம் -என்கிறபடியே அலங்காரங்கள் எல்லாம் -சத்ர சாமராதி ராஜ சிஹ்னங்களை-பெற்று –இவ்வளவிலே போகாதே ஸ்ரீ பரமபதத்திலே போய் புக்கு பதியினில் பாங்கினில் -என்கிறபடி ஸ்ரீ நித்ய சூரிகள் திருவடிகளில் விழும்படியான பேற்றைப் பெறுவார்) 10
கருமா முகில் தோய் நெடுமாடக் கண்ண புரத் தெம்மடிகளைத் திரு மா மகளால் அருள் மாரிச் செழு நீராலி வள நாடன் மருவார் புயல்கைக் கலிகன்றி மங்கை வேந்தன் ஒலி வல்லார் இரு மா நிலத்துக்கு அரசாகி யிமையோர் இறைஞ்ச வாழ்வாரே –8-6-10
பதவுரை Show / Hide
கரு மா முகில், Karumaa Mukil - கறுத்துப் பெருத்தமேகங்கள் (- (மேல் பரமபதத்திலுஞ்சென்று))
தோய், Thoy - வந்து படியப் பெற்ற
நெடு மாடம், Nedu Maadam - பெரிய மாளிகைகளையுடைத்தான
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தி லெழுந்தருளியிருக்கிற
எம் அடிகளை, Em Adigalai - எம்பெருமான் விஷயமாக,
திருமாமகளால், Thirumaamagalal - பெரிய பிராட்டியாரடியாக
அருள்மாரி, Arulmaari - ‘அருள் மாரி’ என்ற திருநாமம் பெற்றவரும்
செழு நீர் ஆலி வளம் நாடன், Sezhu Neer Aali Valam Naadan - ஜலஸம்ருத்தியையுடைய திருவாலி வளநாட்டுக்குத் தலைவரும்
மருவு ஆர் புயல் கை, Maruvu Aar Puyal Kai - எப்போதும் நிலைத்திருக்குந் தன்மைவாய்ந்த காளமேகத்தோடொத்த ஔதார்யத்தை யுடையவரும்
மங்கை வேந்தன், Mangai Vendan - திருமங்கைக்குப் பிரபுவுமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் அருளிச்செய்த
ஒலி, Oli - இப்பாசுரங்களை
வல்லார், Vallaar - கற்றுவல்லவர்கள்
இரு மா நிலத்துக்கு அரசு ஆகி, Iru Maa Nilaththukku Arasu Aagi - (பூமியும் ஸ்வர்க்கமுமாகிற) இரண்டு உலகங்களுக்கும் அரசராயிருக்கப்பெற்று,
இமையோர், Imaiyor - நித்தியமுக்தர்கள்
இறைஞ்ச, Irainj - ஸத்கரிக்கும்படி
வாழ்வார், Vazhvar - வாழப்பெறுவர்கள்.