திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1708 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (பொய்கைகளாலே நெருங்கி இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம் நமக்கு ஸ்ரீ ஸ்வாமி யானவனுடைய வாசஸ் ஸ்தானம்) 1 | வியமுடை விடையின முடைதர மட மகள்
குயமிடை தடவரை யகலம துடையவர்
நயமுடை நடையன மிளையவர் நடை பயில
கயமிடை கண புர மடிகள் தமிடமே –8-7-1 | பதவுரை Show / Hideநயம் உடை நடை, Nayam Udai Nadai - அழகிய நடையையுடைய அனம், Anam - அன்னப் பறவைகள் இளையவர், Ilaiyavar - இளம் பெண்களினுடைய நடை, Nadai - நடையை பயில், Payil - அப்யஸிக்கப்பெற்றதும் கயம், Kayam - தடாகங்கள் மிடை, Midai - நெருங்கியிருக்கப் பெற்றதுமான கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,- வியம் உடை விடை இனம், Viyam Udai Vidai Inam - வலிமை பொருந்திய விருஷபங்களின் கூட்டமானது உடைதர, Udaithara - அழிந்தவளவிலே மட மகள், Mada Magal - மடமைக் குணமுடைய நப்பின்னைப் பிராட்டியானது குயம், Kuyam - திருமுலைகள் மிடை, Midai - நெருங்கியணைப்பெற்ற தட வரை அகலமது உடையவர், Tada Varai Akalamuthu Udaiyavar - பெரிய மலை போன்ற திருமார்பையுடையவரான அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய இடம், Idam - திவ்யதேசமாம். |