திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1709 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ வைஷ்ணவர்கள் உடைய நெஞ்சு கலந்த திரள் மிக்கு இருந்துள்ள ஸ்ரீ திருக் கண்ண புரம்) 2 | இணை மலி மருதி னொடெரு திறவிகல் செய்து
துணை மலி முலையவள் மணமிகு கலவியுள்
மண மலி விழவினொடடிய வரளவிய
கண மலி கண புர மடிகள் தமிடமே –8-7-2 | பதவுரை Show / Hideமணம் மலி, Manam Mali - மகிழ்ச்சி மிகுந்த விழவினொடு, Vizhavinodu - திருவிழாக்களில் அடியவர், Adiyavar - ஸ்ரீவைஷ்ணவர்கள் அளவிய, Alaviy - நெருங்கப்பெற்ற கணம், Kanam - திரள் மலி, Mali - நிறைந்துள்ள கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,- இணை மலி, Inai Mali - சேர்த்தி பொருந்திய மருத, Marutha - (இரட்டை) மருதமரங்களை இற, Ira - இற்று முறிந்துவிழும்படி (செய்தவனும்) எருதினொடு, Eruthinodu - (ஏழு) எருதுகளோடே இகல் செய்து, Ikal Seidhu - போர்புரிந்து துணை மலி முலையவள், Thunai Mali Mulaiyaval - சேர்த்தியழகுவாய்ந்த முலைகளை யுடையளான நப்பின்னைப் பிராட்டியின் மணம், Manam - விவாஹத்தாலுண்டாகக் கூடிய மிகு கலவி, Migu Kalavi - மிகுந்த ஸம்ச்லேஷத்தை உள், Ul - உட்கொண்ட அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய இடம், Idam - திவ்யதேசமாம். |