திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1713 | பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ பெரிய பிராட்டியார் நித்ய வாஸம் பண்ணுகையாலே இளைதாய் கொழுவியதாய் அழகியதான பூவிலே முழுகின வண்டின் உடைய பண் கிளர்ந்த ஸ்ரீ திருக் கண்ண புரம் அடிகள் தம் இடமே) 6 | மழு வியல் படை யுடையவனிடம் மழை முகில்
தழுவிய வுருவினர் திருமகள் மருவிய
கொழுவிய செழு மலர் முழுசிய பறவை பண்
எழுவிய கண புர மடிகள் தமிடமே –8-7-6 | பதவுரை Show / Hideதிருமகள் மருவிய, Thirumagal Maruviya - எரிய பிராட்டியார் பொருந்தியிருக்கப்பெற்ற (- (இன்னமும்)) கொழுவிய செழு, Kozhuviya Sezhu - மிகவும் செழுமைதங்கிய மலர், Malar - தாமரைப்பூவிலே முழுசிய, Muzhuchiya - அவகாஹித்த பறவை, Paravai - (வண்டுகளாகிய) பறவைகளினுடைய பண், Pan - இசைப்பாட்டுகள் எழுவிய, Ezhuviya - எங்கும் வியாபிக்கப்பெற்றதான கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,- மழு, Mazhu - மழுவை இயல்படை உடையவன் இடம், Iyaldapai Udaiyavan Idam - விதேயமான ஆயுதமாகவுடைய பெருமானது இருப்பிடம்; மழை முகில் தழுவிய உருவினர், Mazhai Mukil Thazhuviya Uruvinar - நீர் கொண்டெழுந்த மேகம் போன்ற திருவுருவத்தை யுடையரான அடிகள் தம், Adigal Tham - ஸ்வாமியினுடைய இடம், Idam - திவ்ய தேசமாம். |