திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1714 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1714பெரிய திருமொழி || (8-7–வியமுடை) (திரு கண்ணபுரம் 7) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் சேஷி -நாம் சேஷ பூதர் -என்று இருக்கிற முறையிலே சொல்லுகிற அடியார் தங்களுக்கு பிராப்யம் என்று புத்தி பண்ணி வர்த்திக்கிற ஸ்ரீ திருக் கண்ண புரம்) 7
பரிதி யொடணிமதி பனிவரை திசை நிலம் எரிதி யொடென வினவியல் வினர் செலவினர் சுருதியொ டருமறை முறை சொலு மடியவர் கருதிய கண புர மடிகள் தமிடமே –8-7-7
பதவுரை Show / Hide
சுருதியொடு, Surudhiyodu - ஸ்வரத்தோடு கூடின
அரு மறை, Aru Marai - அருமையான வேதங்களை
முறை, Murai - முறைப்படியே
சொலும், Solum - ஓதுகின்ற
அடியவர், Adiyavar - ஸ்ரீ வைஷ்ணவர்கள்
கருதிய, Karuthiya - (நமக்கு இவ்விடமே ப்ராப்யம் என்று) அநுஸந்திக்கப்பெற்ற
கணபுரம், Kanapuram - திருக்கண்ணபுரமானது,-
பரிதியொடு, Paridhiyodu - ஸூர்யனென்ன
அணி மதி, Ani Mathi - அழகிய சந்திரனென்ன
பனி வரை, Pani Varai - இமயமலை முதலிய குலபர்வதங்களென்ன
திசை, Thisai - திக்குக்களென்ன
நிலம், Nilam - பூமண்டல மென்ன
எரி, Eri - ஜ்வலிக்கின்ற
தியொடு, Thiyodu - அன்நி யென்ன
என, En - என்று சொல்லப்படுகிற
இன, Ina - இப்படிப்பட்ட பொருள்களையெல்லாம்
இயல்வினர், Iyalthinavar - ப்ரகாரமாகவுடையவரும்
செலவினர், Selavinar - இவற்றை நடத்திக்கொண்டு போருகிறவருமான
அடிகள் தம் இடம், Adigal Tham Idam - ஸ்வாமியின் திவ்ய தேசமாம்.