திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1718 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சதா ஏக ரூபமான வடிவை இதர சஜாதீயமாக்கிக் கொண்டு வந்து அவதரித்தவன் – சேஷ பூதனான நான் காணப் பெற்றேன்) 1 | வானோர் அளவும் முது முந்நீர் வளர்ந்த காலம் வலி யுருவில்
மீனாய் வந்து வியந்துய்யக் கொண்ட தண் தாமரைக்கண்ணன்
ஆனா வுருவிலானா யவனை யம்மா விளை வயலுள்
கானார் புறவில் கண்ண புரத்தடியேன் கண்டு கொண்டேனே –8-8-1 | பதவுரை Show / Hideமுது முந்நீர், Muthu Munneer - கடல் வெள்ளம் (- (அடியேன் கண்டு கொண்டேன்-.)) வானோர் அளவும், Vaanor Alavum - தேவர்களின் எல்லையளவும் வளர்ந்த காலம், Valarntha Kaalam - பரந்து சென்ற காலத்திலே வலி உருவின் மீன் ஆய் வந்து, Vali Uruvin Meen Aay Vandhu - வலிகொண்ட வடிவையுடைய மீனாய்த் திருவவதரித்து வியந்து, Viyandhu - ஆச்சரியப்படும்படியாக உய்யக்கொண்ட, Uyyaikonda - எல்லாரையும் பிழைப்பித்தருளின தண் தாமரை கண்ணன், Than Thamarai Kannan - குளிர்ந்த தாமரை போன்ற திருக்கண்களையுடையவனும் ஆனா உருவின் ஆன் ஆயன் அவனை, Aana Uruvin Aan Aayan Avanai - விகாரமற்ற உருவையுடைய ஸ்ரீ கிருஷ்ணனாகத் திருவவதரித்தவனுமான பெருமானை, அம், Am - அழகிய மா, Maa - பரந்த விளை, Vilai - விளைவுமிக்க வயலுள், Vayalul - வயல்களை யுடையதும் கான் ஆர் புறவில், Kaan Ar Puravil - காடுகள் செறிந்த பர்யந்தங்களை யுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |