திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1719 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (தேஜஸ்சை உடைத்தான அம்ருதமானது தோற்றும் அளவும் நீருக்கு இறாயாதாய வடிவை உடைய ஆமையாய்- மலை திரிந்து வரும்படியாக பரப்பை உடைத்தான கடலிலே அதுக்கு தாரக பூதனாய்க் கொண்டு கிடந்த விஸ்மய நீயனை ஸ்ரீ கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே) 2 | மலங்கு விலங்கு நெடு வெள்ளம் மறுக அங்கோர் வரை நட்டு
இலங்கு சோதி யாரமுதம் எய்தும் அளவோர் ஆமையாய்
விலங்கல் திரியத் தடங்கடலுள் சுமந்து கிடந்த வித்தகனை
கலங்கல் முந்நீர்க் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-2 | பதவுரை Show / Hideமலங்கு, Malangu - (உள்ளுக்கிடக்கிற) மீன்சாதிகள் (- (அடியேன் கண்டுகொண்டேன்-)) விலங்கு, Vilangu - தடுமாறும்படியான நெடுவெள்ளம், Neduvellam - பெரிய வெள்ளம் மறுக, Maruga - குழம்பும்படியாக அங்கு, Angu - ஆழமான அவ்விடத்திலே ஓர் வரை நட்டு, Or Varai Nattu - ஒரு (மந்தர) பர்வதத்தை நாட்டி இலங்கு சோதி ஆர் அமுதம், Ilangu Sothi Ar Amudham - விளங்குகின்ற தேஜஸ்ஸோடு கூடின அம்ருதமானது எய்தும் அளவு, Eydhum Alavu - தோன்றும் வரையில் ஓர் ஆமை ஆய், Or Amai Aayi - ஒப்பற்ற ஆமையா யிருந்துகொண்டு விலங்கல், Vilangal - அந்த மந்தரமலையானது திரிய, Thiriya - நாற்புறமும் திரிந்து வரும்படியாக தட கடலுள், Tada Kadalu - பெரிய அக்கடலிலே சுமந்து கிடந்த, Sumandhu Kidandha - (அம்மலையைத்) தாங்கிக்கொண்டிருந்த வித்தகனை, Vithagankalai - ஆச்சரியபூதனான பெருமானை கலங்கல் முந்நீர் கண்ணபுரத்து, Kalangal Munneer Kannapurathu - கலக்கமுள்ள கடலை அணித்தாக வுடைய திருக்கண்ணபுரத்திலே |