திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1720 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அண்டபித்தியிலே சென்று சேர்ந்த பூமியை இடந்து எடுத்துக் கொண்டு ஏறுகைக்கு ஈடான வலியை உடைய ஸ்ரீ சர்வேஸ்வரனை) 3 | பாராரளவும் முது முந்நீர் பரந்த காலம் வளை மருப்பில்
ஏரார் உருவத் தேனமாய் எடுத்த வாற்றல் அம்மானை
கூரார் ஆரல் இரை கருதிக் குருகு பாயக் கயல் இரியும்
காரார் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-3 | பதவுரை Show / Hideமுது முந்நீர், Muthu Munneer - கடல் வெள்ளம் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) பாராரளவும், Paararalavum - பூமிப்பரப்படங்கலும் பரந்த காலம், Paranda Kaalam - சூழ்ந்த காலத்தில் வளை மருப்பில், Valai Maruppil - வளைந்த கோரப்பல்லையுடைய ஏர் ஆர் உருவத்து, Aer Ar Uruvathu - அழகு மிக்க திருமேனியை யுடைய ஏனம் ஆய், Enam Aayi - வராஹமூர்த்தியாகி எடுத்த, Edutha - (பூமியை) உத்தரிப்பித்த ஆற்றல், Aatral - மிடுக்கையுடையனான அம்மானை, Ammaanai - ஸர்வேச்வரனை கூர் ஆர், Koora Ar - கூர்மை பொருந்திய (வாயலகுகளையுடைய) குருகு, Kurugu - நாரைகளானவை ஆரல், Aaral - ஆரல் மீன்களை இரை கருதி, Irai Karuthi - ஆஹாரமாகக் கொள்ள நினைத்து பாய, Paaya - (நீரில்) பாய்ந்தவளவிலே கயல், Kayal - கயல் மீன்கள் இரியும், Iridum - அஞ்சியோடும் படியுள்ளதும் கார் ஆர் புறவில், Kaar Ar Puravil - மேகங்கள் படிந்த சோலைகளை யுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் |