திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1721 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (சத்ரு பஷமானது குலைந்து ஓடும்படி இருக்கிற சிம்ஹமும்-உளை மயிருமாய் மனுஷ்ய வேஷமும் சேராத வடிவு இரண்டும் சேர்ந்து தோன்ற –சத்ருவான ஹிரண்யனுடைய மார்வை யுத்தத்திலே பிளந்து வளைந்த திரு வுகிரை உடையவனை) 4 | உளைந்த வரியும் மானிடமும் உடனேத் தோற்ற ஒன்றுவித்து
விளைந்த சீற்றம் விண் வெதும்ப வேற்றொன் அகலம் வெஞ்சமத்து
பிளந்து வளைந்த வுகிரானைப் பெரும் தண் செந்நெல் குலை தடிந்து
களம் செய் புறவில் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-4 | பதவுரை Show / Hideஉளைந்த, Ulaindha - கண்டபோதே அஞ்சி நடுங்க வேண்டும்படியான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) அரியும், Ariyum - சிங்கவுருவத்தையும் மானிடமும், Maanidamum - மனிதவுருவத்தையும் உடனாய் ஒன்றுவித்து, Udanai Onruvithu - ஒருசேரப் பொருந்தச் செய்து தோன்ற, Thondra - (நரஸிம்ஹரூபியாய்த்)தோன்ற (அப்போது) விளைந்த, Vilaintha - உண்டான சீற்றம், Seetrum - கோபத்தைக் கண்டு விண் வெதும்ப, Vin Vethumba - விண்ணுலகத்தவர்களும் அஞ்சி நடுங்க வேற்றோன், Vetroron - பகைவனான இரணியனுடைய அகலம், Agalam - மார்பை வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்திலே பிளந்து, Pilandhu - இருபிளவாக்கி வளைந்த உகிரானை, Valaindha Ukiraanai - வளைந்த நகங்களையுடைய பெருமானை, பெரு, Peru - பெருத்த தண், Than - அழகிய செந்நெல் குலை, Sennel Kulai - செந்நெற்கதிர்கள் தடிந்து, Thadinthu - வயிரம்பற்றி களம் செய், Kalam Sei - இருள் மூடியிருக்கப்பெற்ற புறவில், Puravil - சுற்றுப்பிரதேசங்களை யுடைத்தான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |