திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1724 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெவ்விய சீற்றத்தை உடைய கடியிலங்கை குடி கொண்டோட யுத்தத்திலே வெவ்விய போரை பண்ணின நம்முடைய ஸ்ரீ ஸ்வாமியை) 7 | வையம் எல்லாம் உடன் வணங்க வணங்கா மன்னனாய்த் தோன்றி
வெய்ய சீற்றக் கடியிலங்கை குடி கொண்டோட வெஞ்சமத்து
செய்த வெம்போர் நம்பரனைச் செழும் தண் கானல் மண நாறும்
கைதை வேலிக் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-7 | பதவுரை Show / Hideவையம் எல்லாம், Vaiyam Ellam - உலகமெல்லாம் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.-)) உடன் வணங்க, Udan Vananga - ஒருமைப்பட்டு திருவடிகளில் விழுந்துவணங்க வணங்கா, Vanangaa - தான் ஒருவரையும் வணங்க வேண்டும்படியிராத மன்னன் ஆய், Mannan Aay - ராஜாதிராஜனாய் (இராமபிரானாய்) தோன்றி, Thonri - திருவவதரித்து வெய்ய சீற்றம், Veyya Seetrum - கடுமையான சீற்றத்தையுடையதும் கடி, Kadi - அரண்களையுடையதுமான இலங்கை, Ilankai - இலங்காபுரியிலுள்ளவர்கள் குடி கொண்டு ஓட, Kudi Kondu Oda - குடும்பத்தோடும் (யமலோகத்திற்கு) ஓடிச் செல்லும்படியாக வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்தில் வெம் போர் செய்த, Vem Por Seitha - கடுமையான யுத்தத்தை நடத்தின நம் பரனை, Nam Paranai - எம்பெருமானை,- செழு, Sezhu - அழகிய தண், Than - குளிர்ந்த கானல், Kaanal - நெய்தல் நிலத்தையுடையதும் மணம் நாறும் கைதை, Manam Naarum Kaithai - பரிமளம்மிக்க தாழைகளை வேலி, Veli - வேலியாகவுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |