திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1725 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (வெற்றியே தொழிலாக உடைய வேலை உடைய ராஜாக்கள் விண்ணிலே செல்ல யுத்தத்திலே செற்ற வெற்றியை தொழிலாக உடையவனை) 8 | ஒற்றைக் குழையும் நாஞ்சிலும் ஒரு பால் தோன்றத் தான் தோன்றி
வெற்றித் தொழிலார் வேல் வேந்தர் விண் பால் செல்ல வெஞ்சமத்து
செற்ற கொற்றத் தொழிலானைச் செந்தீ மூன்றும் இல்லிருப்ப
கற்ற மறையோர் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-8 | பதவுரை Show / Hideஒற்றை குழையும், Otrai Kuzhaiyum - ஒரு காதில் தொங்குகிற திருக்குண்டலமும் (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) ஒருபால், Orupaal - ஒரு பக்கத்தில் நாஞ்சிலும், Naanjilum - கலப்பையும் தோன்ற, Thondra - விளங்க தான் தோன்றி, Thaan Thondri - (பலராமனாய்த்) திருவவதரித்து, வெற்றி தொழிலார், Vettri Thozhilar - ஜயம்பெறுவதையே இயல்வாக வுடையரும் வேல், Vel - வேற்படையையுடையருமான வேந்தர், Vendar - அரசர்கள் விண் பால் செல்ல, Vin Paal Chella - வீரதஸ்வர்க்கத்திற்குச் சென்று சேரும்படி வெம் சமத்து, Vem Samathu - வெவ்விய போர்க்களத்தில் செற்ற, Settra - (அவ்வரசர்களை) அழியச் செய்ததனாலுண்டான கொற்றம், Kotrham - வெற்றியை தொழிலானை, Thozhilaanaik - தொழிலாகவுடைய பெருமானை,- செம் தீ மூன்றும், Sem Thee Moondrum - த்ரேதாக்நிகளெனப்படுகிற மூன்று அக்நிகளும் இல், Il - திருமாளிகை தோறும் இருப்ப, Iruppa - ஜ்வலித்துக் கொண்டிருக்கப்பெற்றதும் கற்ற மறையோர், Katra Maraiyor - கலைகளைக் கற்ற வைதிகர்களுடையதுமான கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்தில் “ஒற்றைக்குழையும், Otrai Kuzhaiyum - ஒருகாதுக்குழையும்” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானம். இதற்கு அரும்பதவுரைகாரர் |