திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1726 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1726பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அபர பஷத்திலே அஷ்டமியிலே நள் இருளிலே பிறந்தவனை) 9
துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள் இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல் கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9
பதவுரை Show / Hide
துவரி கனி வாய், Thavari Kani Vaai - இலவம் பூப்போலவும் கொவ்வைக்கனி போலவும் சிவந்த அதரத்தையுடையளான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.))
நிலம் மங்கை, Nilam Mangai - பூமிப்பிராட்டியானவள்
துயர் தீர்ந்து, Thuyar Theerndhu - (பாவிகளைச் சுமப்பதனாலுண்டான) துக்கம் தொலைந்து
உய்ய, Uyya - சுகப்படும்படியும்,
பாரதத்துள், Bharathaththul - பாரதப் போரில்
இவரித்த, Ivariththa - எதிரிட்ட
அரசர், Arasar - ராஜாக்கள்
தடுமாற, Thadumara - நிலைகுழம்பும்படியாகவும்
இருள் நாள், Irul Naal - இராப்பொழுதில்
பிறந்த, Pirandha - திருவவதரித்த
அம்மானை, Ammaanai - ஸ்வாமியை,-
ஒரு பால், Oru Paal - ஒரு புறத்தில்
உவரி ஓதம், Uvari Otham - கடலலைகள்
முத்து, Muthu - முத்துக்களை
உந்த, Unda - ஒதுக்கித்தள்ளவும்
ஒரு பால், Oru Paal - இன்னொருபுறத்தில்
ஒண், On - அழகிய
செந்நெல், Sennel - செந்நெற்பயிர்கள்
கவரி வீசும், Kavari Veesum - சாமரம் போல் வளைந்து வீசவும் பெற்ற
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே