திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1726 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அபர பஷத்திலே அஷ்டமியிலே நள் இருளிலே பிறந்தவனை) 9 | துவரிக் கனிவாய் நிலமங்கை துயர் தீர்ந்து உய்யப் பாரதத்துள்
இவரித் தரசர் தடுமாற இருள் நாள் பிறந்த வம்மானை
உவரியோதம் முத்துந்த ஒரு பால் ஒரு பால் ஒண் செந்நெல்
கவரி வீசும் கண்ண புரத்து அடியேன் கண்டு கொண்டேனே –8-8-9 | பதவுரை Show / Hideதுவரி கனி வாய், Thavari Kani Vaai - இலவம் பூப்போலவும் கொவ்வைக்கனி போலவும் சிவந்த அதரத்தையுடையளான (- (அடியேன் கண்டுகொண்டேன்-.)) நிலம் மங்கை, Nilam Mangai - பூமிப்பிராட்டியானவள் துயர் தீர்ந்து, Thuyar Theerndhu - (பாவிகளைச் சுமப்பதனாலுண்டான) துக்கம் தொலைந்து உய்ய, Uyya - சுகப்படும்படியும், பாரதத்துள், Bharathaththul - பாரதப் போரில் இவரித்த, Ivariththa - எதிரிட்ட அரசர், Arasar - ராஜாக்கள் தடுமாற, Thadumara - நிலைகுழம்பும்படியாகவும் இருள் நாள், Irul Naal - இராப்பொழுதில் பிறந்த, Pirandha - திருவவதரித்த அம்மானை, Ammaanai - ஸ்வாமியை,- ஒரு பால், Oru Paal - ஒரு புறத்தில் உவரி ஓதம், Uvari Otham - கடலலைகள் முத்து, Muthu - முத்துக்களை உந்த, Unda - ஒதுக்கித்தள்ளவும் ஒரு பால், Oru Paal - இன்னொருபுறத்தில் ஒண், On - அழகிய செந்நெல், Sennel - செந்நெற்பயிர்கள் கவரி வீசும், Kavari Veesum - சாமரம் போல் வளைந்து வீசவும் பெற்ற கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே |