திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1727 | பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம்) 10 | மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த்
தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும்
ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த
தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8-8-10 | பதவுரை Show / Hideமீனோடு, Meenodu - மத்ஸ்ய ரூபியாயும் ஆமை, Aamai - கூர்ம ரூபியாயும் கேழல், Kezhal - வராஹரூபியாயும் அரி, Ari - நரஸிம்ஹ ரூபியாயும் குறள் ஆய், Kural Aay - வாமநமூர்த்தியாயும் முன்னும் இராமன் அய், Munnum Iraaman Ayi - பரசுராம மூர்த்தியாயும் தான் ஆய், Thaan Aay - ஸாக்ஷாதவதாரமான ஸ்ரீராமபிரானாயும் பின்னும் இராமன் ஆய், Pinnum Iraaman Aay - பலராமனாயும் தாமோதரன் ஆய், Thaamodharan Aay - கண்ணபிரானாயும் கற்கியும் ஆனான் தன்னை, Karkiyum Aanaan Thannai - கல்கியாயும் திருவவதாரஞ் செய்யுமியல் பினனான எம்பெருமானை கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே (ஸேவித்து) அடியன், Adiyan - சேஷபூதரான கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார் ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த தேன் ஆர் இன் சொல், Then Aar In Sol - தேன் போன்று மதுரமான சொற்களையுடைய தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்ப்பாசுரங்களை செப்ப, Seppa - அப்யஸிக்குமளவில் பாவம், Paavam - பாவங்கள் நில்லா, Nilla - நிற்கமாட்டாமல் அகன்றொழியும், |