திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1727 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1727பெரிய திருமொழி || (8-8–வானோர் அளவும்) (திரு கண்ணபுரம் 8) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஸ்ரீ திருக் கண்ண புரத்திலே கண்டு அடிமை புக்க –ஸ்ரீ ஆழ்வார் அருளிச் செய்த தேனோடு ஒத்த நல்ல சொல்லை உடைய தமிழ் மாலை சொல்ல பாவமானது போம்) 10
மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் ராமனாய்த் தானாய் பின்னும் ராமனாய்த் தாமோதரனாய்க் கற்கியும் ஆனான் தன்னை கண்ண புரத் தடியன் கலியன் ஒலி செய்த தேனார் இன் சொல் தமிழ் மாலை செப்பப் பாவம் நில்லாதே –8-8-10
பதவுரை Show / Hide
மீனோடு, Meenodu - மத்ஸ்ய ரூபியாயும்
ஆமை, Aamai - கூர்ம ரூபியாயும்
கேழல், Kezhal - வராஹரூபியாயும்
அரி, Ari - நரஸிம்ஹ ரூபியாயும்
குறள் ஆய், Kural Aay - வாமநமூர்த்தியாயும்
முன்னும் இராமன் அய், Munnum Iraaman Ayi - பரசுராம மூர்த்தியாயும்
தான் ஆய், Thaan Aay - ஸாக்ஷாதவதாரமான ஸ்ரீராமபிரானாயும்
பின்னும் இராமன் ஆய், Pinnum Iraaman Aay - பலராமனாயும்
தாமோதரன் ஆய், Thaamodharan Aay - கண்ணபிரானாயும்
கற்கியும் ஆனான் தன்னை, Karkiyum Aanaan Thannai - கல்கியாயும் திருவவதாரஞ் செய்யுமியல் பினனான எம்பெருமானை
கண்ணபுரத்து, Kannapurathu - திருக்கண்ணபுரத்திலே (ஸேவித்து)
அடியன், Adiyan - சேஷபூதரான
கலியன், Kaliyan - திருமங்கையாழ்வார்
ஒலி செய், Oli Sei - அருளிச் செய்த
தேன் ஆர் இன் சொல், Then Aar In Sol - தேன் போன்று மதுரமான சொற்களையுடைய
தமிழ் மாலை, Tamizh Maalai - இத்தமிழ்ப்பாசுரங்களை
செப்ப, Seppa - அப்யஸிக்குமளவில்
பாவம், Paavam - பாவங்கள்
நில்லா, Nilla - நிற்கமாட்டாமல் அகன்றொழியும்,