திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1729 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1729பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னுடைய ரஷணத்தில் உத்யுக்தனாய்க் கொண்டு ஸ்ரீ திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ சர்வாதிகனை – ப்ரஹ்மாதிகளுக்காக கடலிலே வந்து கண் வளர்ந்து அருளின பெரியவனை –அடியேன் அடைந்து உய்ந்து பிழைக்கப் பெற்றேன்) 2
தருமான மழை முகிலைப் பிரியாது தன்னடைந்தார் வருமானம் தவிர்க்கும் மணியை யணி யுருவில் திருமாலை யம்மானை யமுதத்தைக் கடல் கிடந்த பெருமானை – அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேனே –8-9-2
பதவுரை Show / Hide
தரு, Tharu - கல்பவிருக்ஷம் போன்றவனும் (- (அடியேன் அடைந்து உய்ந்து பிழைத்தேன்-,))
மானம், Maanam - பெரிய
மழை முகிலை, Mazhai Mukilai - காளமேகம் போன்றவனும்,
பிரியாது, Priyaadhu - ஒரு காலும் விட்டுநீங்காமல்
தன் அடைந்தார், Than Adaindhaar - தன்னை வந்து பணிந்தவர்கட்கு
வரும், Varum - நேர்கின்ற
மானம், Maanam - அவமானத்தை
தவிர்க்கும், Thavirkum - போக்குகின்றவனும்
மணியை, Maniyai - நீல மணிபோன்றவனும்
அணி உருவின், Ani Uruvin - அழகிய வடிவத்தையுடைய
திருமாலை, Thirumaalai - லக்ஷ்மீநாதனும்
அம்மானை, Ammaanai - ஸர்வசேஷியா யிருப்பவனும்
அமுதத்தை, Amudhatthai - அமிருதம் போன்றவனும்
கடல் கிடந்த பெருமானை, Kadal Kidandha Perumai - திருபாற்கடலில் திருகண்வளர்ந்தருளும் பெருமானுமான ஸ்ரீசௌரிப் பெருமானை