திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1730 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1730பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது தான் உமக்கு எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன நான் பிறர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார்) 3
விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப் படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3
பதவுரை Show / Hide
அன்று, Andru - முன்பொருகாலத்தில் (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக)
ஏழ்விடை, Ezhuvidai - ஏழு ரிஷபங்களை
வெகுண்டு, Vegundu - சீறிக்கொண்டு
அடர்த்து, Adarthu - வலியடக்கினவனும்,
விலங்கல், Vilangal - த்ரிகூடபர்வதத்தில்
உற, Ura - சென்று சேரும்படியாக
படையால், Padaiyal - (வாநர) ஸேனைகளைக்கொண்டு
ஆழி, Aazhi - ஸமுத்ரத்தை
தட்ட, Thatta - அடைத்தவனும்,
பரமன், Paraman - எல்லாரினுஞ் சிறந்தவனும்
பரம் சோதி, Param Sothi - சிறந்த தேஜஸ்ஸ்வரூபியும்
மடை ஆர், Madai Aar - மடைகளெங்கும் நிரம்பிய
நீலம், Neelam - நீலோற்பல மலர்கள்
மல்கும், Malkum - வியாபித்திருக்கப் பெற்ற
வயல், Vayal - கழனிகளாலே
சூழ், Sool - சூழப்பட்ட
கண்ணபுரம் ஒன்று, Kannapuram Ondru - திருக்கண்ணபுரமென்கிற ஒரு விலக்ஷண திவ்யதேசத்தை
உடையானுக்கு, Udaiyanukku - (இருப்பிடமாக) உடைய பெருமானுக்கு
அடியேன், Adiyen - சேஷபூதனான நான்
ஒருவர்க்கு, Oruvarkku - வேறுசிலர்க்கு
உரியேனோ, Uriyenoo - உரிமைப்படுவேனோ?