திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1730 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இது தான் உமக்கு எத்தனை குளிக்கு நிற்கும் -என்ன நான் பிறர்க்கு உரியேன் அல்லேன் -என்கிறார்) 3 | விடை ஏழு அன்று அடர்த்து வெகுண்டு விலங்கலுறப்
படையாலாழி தட்ட பரமன் பரஞ்சோதி
மடையார் நீலம் மல்கும் வயல் சூழ் கண்ண புரம் ஓன்று
உடையானுக்கு அடியேன் ஒருவர்க்கு உரியேனோ –8-9-3 | பதவுரை Show / Hideஅன்று, Andru - முன்பொருகாலத்தில் (நப்பின்னைப் பிராட்டியைப் பெறுதற்காக) ஏழ்விடை, Ezhuvidai - ஏழு ரிஷபங்களை வெகுண்டு, Vegundu - சீறிக்கொண்டு அடர்த்து, Adarthu - வலியடக்கினவனும், விலங்கல், Vilangal - த்ரிகூடபர்வதத்தில் உற, Ura - சென்று சேரும்படியாக படையால், Padaiyal - (வாநர) ஸேனைகளைக்கொண்டு ஆழி, Aazhi - ஸமுத்ரத்தை தட்ட, Thatta - அடைத்தவனும், பரமன், Paraman - எல்லாரினுஞ் சிறந்தவனும் பரம் சோதி, Param Sothi - சிறந்த தேஜஸ்ஸ்வரூபியும் மடை ஆர், Madai Aar - மடைகளெங்கும் நிரம்பிய நீலம், Neelam - நீலோற்பல மலர்கள் மல்கும், Malkum - வியாபித்திருக்கப் பெற்ற வயல், Vayal - கழனிகளாலே சூழ், Sool - சூழப்பட்ட கண்ணபுரம் ஒன்று, Kannapuram Ondru - திருக்கண்ணபுரமென்கிற ஒரு விலக்ஷண திவ்யதேசத்தை உடையானுக்கு, Udaiyanukku - (இருப்பிடமாக) உடைய பெருமானுக்கு அடியேன், Adiyen - சேஷபூதனான நான் ஒருவர்க்கு, Oruvarkku - வேறுசிலர்க்கு உரியேனோ, Uriyenoo - உரிமைப்படுவேனோ? |