திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1732 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1732பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாம் என்ன உபகாரம் பண்ணினோமாக தான் இப்படி கிடந்து படுகிறது -என்ன – நான் இருந்த இடம் தேடி நீயே வந்தாய் – ஸ்ரீ திருக் குடந்தையிலே கண் வளர்ந்து நாம் ஆஸ்ரிதர்க்கு உறுப்பாகப் பெற்றோமே இறே-என்று அத்தாலே உகந்து – இப்படி உபகாரகனான உன்னை மறவாது ஒழியப் பெற்றேன் – நீயோ தீரக் கழிய உபகரித்து நின்றாய் – நான் அந்த உபகாரகத்தை மறவாது ஒழியப் பெற்றேன் –இனி இதுக்கு மேற்பட பேறு உண்டோ) 5
வந்தாய் என் மனத்தே வந்து நீ புகுந்த பின்னை எந்தாய் போய் அறியாய் யிதுவே யமையாதோ கொந்தார் பைம் பொழில் சூழ் குடந்தைக் கிடந்துகந்த மைந்தா வுன்னை என்றும் மறவாமை பெற்றேனே –8-9-5
பதவுரை Show / Hide
எந்தாள், Endhaal - எம்பெருமானே!
என் மனத்தே, En Manathae - என் நெஞ்சினுள்ளே
நீ வந்தாய், Nee Vandhaai - நீ வந்து புகுந்தாய்;
வந்து புகுந்து பின்னை, Vandhu Pugundhu Pinnai - அங்ஙனம் வந்து சேர்ந்த பின்பு
போய் அறியாய், Poi Ariyaai - திரும்பிப்போவதை அடியோடு மறந்திட்டாய்;
இதுவே, Idhuvae - இந்தப் பேறுதானே
அமையாதோ, Amaiyaa Tho - போராதோ?
கொந்து ஆர், Kondhu Aar - கொத்துக்கள் நிரம்பிய
பை பொழில், Pai Pozhil - பரந்த சோலைகளினால்
சூழ், Sool - சூழப்பட்ட
குடந்தை, Kudandhai - திருக்குடந்தையிலே
கிடந்து, Kidandhu - சாய்ந்தருளி
உகந்த, Ugantha - திருவுள்ளமுவந்த
மைந்தா, Maindha - ஸுந்தரனே!,
உன்னை, Unnai - உன்னை
என்றும், Endrum - என்றைக்கும்
மறவாமை பெற்றேன், Maravaamai Pettraen - மறவாமலிக்கப் பெற்றேன்.