திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1733 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1733பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நெஞ்சைப் பார்த்து அதினுடைய நினைவை காதாசித்கமாக்கி அவன் நம்மை உபகரித்து நின்றான் நீ தப்பச் செய்யா நின்றாய் – என்கிறார்) 6
எஞ்சா வென் நரகத்து அழுந்தி நடுங்கின்றேற்கு அஞ்சேல் என்று அடியேனை யாட் கொள்ள வல்லானை நெஞ்சே நீ நினையாது இறைப் போதும் இருத்தி கண்டாய் மஞ்சார் மாளிகை சூழ் வயலாலி மைந்தனையே –8-9-6
பதவுரை Show / Hide
எஞ்சா, Enjaa - ஒருகாலும் குறைதலில்லாத
வெம் நரகத்து, Vem Narakathu - கொடிய நரகத்திலே
அழுந்தி, Azhundhi - ஆழங்காற்பட்டு
நடுங்குகின்றேற்று அடியேனை, Nadungikindretru Adiyanai - நடுங்குகின்ற என்னை
அஞ்சேல் என்று, Anjeyl Endru - ‘பயப்படாதே’ என்று தேற்றி
ஆட்கொள்ள வல்லானை, Aadkolla Vallaanaik - அடிமைகொள்ள வல்லவனும்
மஞ்சு ஆர் மாளிகை சூழ், Manju Aar Maaligai Soozh - மேகமண்டலத்தளவும் ஓங்கின திருமாளிகைகளால் சூழப்பட்டு
வயல், Vayal - வயல்களையுடைத்தான
ஆலி, Aali - திருவாலியில் எழுந்தருளியிருக்கிற
மைந்தனை, Maindhanai - ஸ்வாமியுமான ஸ்ரீசௌரிப்பெருமானை
நெஞ்சே, Nenjey - மனமே!
நீ, Nee - நீ
இறைப்பொழுதும், Iraippoludhum - க்ஷணகாலமும்
நினையாது இருத்தி கண்டாய், Ninaiyadhu Irudhi Kandaai - நினையாமலேயிருக்கிறாயே.