திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1734 | பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (உமக்கு இத்தனை அதி மாத்திர நிர்பந்தம் என் என்ன – இவ்விஷயத்தை விட்டுப் போய்-பின்னை நீ ஆரை நினைக்க இருக்கிறாய் -என் புறம்பு நினைக்க ஒருவரும் இல்லையோ என்னில் இது வன்றோ புறம்பு உள்ளார் படி) 7 | பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு
உற்றானாய் வளர்த்து என் உயிராகி நின்றானை
முற்றா மா மதி கோள் விடுத்தானை யெம்மானை
எத்தால் யான் மறக்கேன் இனி இது சொல் என் ஏழை நெஞ்சே –8-9-7 | பதவுரை Show / Hideபெற்றார், Petraar - என்னைப் பெற்ற தாய்தந்தையர் (- (என் ஏழை நெஞ்சே!- ;)) பெற்று ஒழிந்தார், Petru Ozhindhaar - பெற்றுப் போட்டுப் போய்விட்டார்கள்; பின்னும், Pinnum - பின்பு அடியேனுக்கு, Adiyanukku - அடியேனுக்கு உற்றான் ஆய் நின்று, Utran Aayi Nindru - ஸகலவித பந்துவுமாயிருந்து கொண்டு வளர்த்து, Valarthu - என்னை வளரச்செய்து என் உயிர் ஆகி நின்றானை, En Uyir Aagi Nindraanai - (அவ்வளவோடும் விடாமல்) எனக்கு உயிராயிருந்து கொண்டு மேலும் நன்மைகளைச் செய்பவனும் முற்றா மா மதி, Mutraa Maa Mathi - பருவம் நிரம்பாத சந்திரனுடைய கோள், Kol - க்ஷயரோகத்தை விடுத்தானை, Viduthaanai - போக்கினவனுமான எம்மானை, Emmaanai - எம்பெருமானை எத்தால், Eththal - எக்காரணம்பற்றி யான் மறக்கேன், Yaan Marakken - நான் மறக்க வல்லேன்? இது சொல், Idhu Sol - இவ்விஷயத்திற்கு விடைகூறு. |