திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1737 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1737பெரிய திருமொழி || (8-9–கைம்மான) (திரு கண்ணபுரம் 9) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இன் தமிழாகிற இசைத் தொடையைக் கொண்டு கைங்கர்ய ருசியை உடையரான நீங்கள் –கடல் சூழ்ந்த பூமியிலே இவற்றைப் பாடுவது ஆடுவதாய் உஜ்ஜீவித்துப் போகப் பாருங்கோள் – அன்றிக்கே – சர்க்கே பி நோ பஜா யந்தே பிரளயே நவ்ய தந்திச -என்கிறபடியே வரக் கடவதான பிரளயத்திலே புக்கு அழுந்தி நோவு படாமே நீங்கள் இவற்றைக் கொண்டு பாடுவது ஆடுவதாக உங்கள் சஞ்சாரத்தாலே ஜகத்தை உஜ்ஜீவிப்பிக்க பாருங்கோள் என்னுதல்) 10
செரு நீர் வேல் வலவன் கலிகன்றி மங்கையர் கோன் கரு நீர் முகல் வண்ணன் கண்ண புரத்தானை இரு நீரின் தமிழின் இன்னிசை மாலைகள் கொண்டு தொண்டீர் வரு நீர் வையம் உய்ய விவை பாடி யாடுமினே –8-9-10
பதவுரை Show / Hide
கரு, Karhu - கர்ப்பத்தில்
நீர், Neer - நீர்கொண்ட
முகில், Mugil - மேகம் போன்ற
வண்ணன், Vannan - திருநிறத்தையுடையரான
கண்ணபுரத்தானை, Kannapuraththaanai - சௌரிப்பெருமாள் விஷயமாக,-
செரு நீர வேல் வலவன், Seru Neera Vel Valavan - யுத்தம் செய்வதையே இயல்வாக வுடைய வேற்படையைப் பிரயோகிக்கவல்லவரும்
மங்கையர் கோன், Mangaiyar Kon - திருமங்கையிலுள்ளார்க்கு அரசருமான
கலிகன்றி, Kalikanri - ஆழ்வார் (அருளிச்செய்த)
இரு நீர், Iru Neer - மிக்க நீர்மையையுடைய
இன் தமிழ், In Tamil - இனிய தமிழினாலாகிய
இன் இசை, In Isai - இனிய இசையையுடைய
இவை மாலைகள் கொண்டு, Ivai Malaigal Kondo - இச்சொல் மாலைகளைக் கொண்டு
தொண்டீர், Thondheer - தொண்டர்களே!
வரு நீர் வையம் உய்ய, Varu Neera Vaiyam Uyy - கடல் சூழ்ந்த உலகம் உஜ்ஜீவிக்கும்படி
பாடி, Paadi - வாயாரப்பாடி
ஆடுமின், Aadumin - மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகக் கூத்தாடுங்கள்