திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1742 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நாமும் உகந்து –வலிய புருஷகாரமும் உண்டாய் –சுலபனும் -ஆனாலும்-நீர் புறம்பு பற்றற்று அகிஞ்சனராய் வரும் அன்று அன்றோ கார்யகரம் ஆவது -என்ன என் குறை அறுத்து வைத்தேன்-நீ உன் தலையிலே குறை கிடவாதபடி பரிஹரித்துக் கொள்ளாய்-என்கிறார்) 5 | பெற்றாரும் சுற்றமும் என்று இவை பேணேன் நான்
மற்றாரும் பற்றிலேன் ஆதலால் நின் அடைந்தேன்
உற்றான் என்று உள்ளத்து வைத்தருள் செய் கண்டாய்
கற்றார் சேர் கண்ண புரத்துறை யம்மானே –8-10-5 | பதவுரை Show / Hideகற்றார் சேர், Kattrar Ser - பண்டிதர்கள் சேர்ந்து வாழுமிடமான (- (கண்ணபுரத்து, உறை அம்மானே!- ;)) பெற்றாரும், Pettrarum - மாதாபிதாக்களென்ன சுற்றமும், Sutramum - உறவினரென்ன என்ற இவை, Endra Ivai - என்று சொல்லப்படுகிற இப்படிப்பட்டவர்களை நான் பேணேன், Naan Peene - நான் உற்றாராக விரும்ப மாட்டேன்; மற்று ஆரும், Mattru Aarum - மற்று யாரிடத்திலும் பற்று இலேன், Patru Ileen - பற்று உடையேனல்லேன்; ஆதலால், Aathalal - ஆகையாலே நின் அடைந்தேன், Nin Adaindhen - உன்னைவந்து ஆச்ரயித்தேன்; உள்ளத்து, Ullathu - திருவுள்ளத்திலே உற்றான் என்று வைத்து, Utran Endru Vaiththu - இவன் நம்முடையவன் என்று அபிமானித்து அருள் செய், Arul Sei - கிருபை பண்ணவேணும். |