திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1745 | பெரிய திருமொழி || (8-10–வண்டார்) (திரு கண்ணபுரம் 10) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நீ பாபங்களைக் கனக்க கூடு பூரித்து வைக்க –அதனுடைய பலானுபவத்தை பண்ணுவிக்குமவர்களுக்கு மறைந்து வர்திக்கைக்கு ஹேது என் -என்ன – நீ ஆஸ்ரிதர்க்காக உன்னை அர்த்தி யாக்கின படியையும்-விரோதி நிரசன சீலனாய் இருக்கிற படியையும் அனுசந்தித்தேன் – அவை வாசனையோடே போய் நிற்க்கக் கண்டேன் -என்கிறார்) 8 | மாணாகி வையம் அளந்ததுவும் வாளவுணன்
பூணாகம் கீண்டதுவும் ஈண்டு நினைந்து இருந்தேன்
பேணாத வல்வினையேன் இடர் எத்தனையும்
காணேன் நான் கண்ண புரத்துறை யம்மானே –8-10-8 | பதவுரை Show / Hideமாண் ஆகி, Maan Aagi - (முன்பு) வாமநப் பிரமசாரியாகி (- (கண்ணபுரத்துறை அம்மானே!- ;)) வையம், Vaiyam - உலகங்களை அளந்ததுவும், Alandhathuvum - அளந்துகொண்டதையும் வாள் அவுணன், Vaal Avunan - வாள்கொண்ட இரணியாசுரனுடைய பூண் ஆகம், Poon Aagam - ஆபரணங்களணிந்தமார்பை கீண்டதுவும், Keendathuvum - கிழித்தெறிந்ததையும் ஈண்டு, Eendu - இப்போது நினைத்திருந்தேன், Ninaiththirundhen - நான் அநுஸந்திக்கின்றேன்; பேணாத, Penaadha - ஆத்மோஜ்ஜீவநத்துக்கு ஒரு நன்மையும் செய்து கொள்ளாதவனும் வல் வினையேன் நான், Val Vinaiyen Naan - வலியபாபங்களையுடையவனுமான நான் இடர் எத்தனையும், Idar Eththanaiyum - துளி பாவத்தையும் காணேன், Kaanen - (என்னிடத்தில்) காண்கிறேனில்லை. |