திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1757 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1757பெரிய திருமொழி || (9-1–வங்கமா முந்நீர்) (திருக் கண்ணங்குடி) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ப்ரஹ்மாஸ்த்ரத்துக்கும் அழியாத ஊரை வில்லாலே அக்னி கிளரும்படியாக செற்ற ஸ்ரீ திருக் கண்ணங்குடியுள் நின்றானை – ஸ்ரீ ஆழ்வார் ஒலியை உடைத்தாக அருளிச் செய்தவையாய்–லஷணங்களில் குறை அற்று இருந்துள்ள இப்பத்தையும் அப்யசிக்க வல்லார்க்களுக்கு ஸ்ரீ பகவத் தாரித்ர்யம் இல்லை – என்கிறார்) 10
கலையுலா வல்குல் காரிகை திறத்துக் கடல் பெரும் படையொடும் சென்று சிலையினால் இலங்கை தீ எழச் செற்ற திருக் கண்ணங்குடியுள் நின்றானை மலைகுலா மாட மங்கையர் தலைவன் மான வேல் கலியன் வாய் ஒலிகள் உலவு சொல் மாலை யொன்பதொடு ஒன்றும் வல்லவர்க்கு இல்லை நல்குரவே –9-1-10
பதவுரை Show / Hide
கலை உலா அல்குல், Kalai Ula Alkul - நல்ல ஆடை உலாவுகின்ற இடுப்பையுடையளான
காரிகை திறத்து, Kaarikai Thirathu - அழகிற்சிறந்த ஸீதாபிராட்டிக்காக
கடல் பெரு படையொடும் சென்று, Kadal Peru Padaiyodum Sendru - ஸமுத்திரத்திற் காட்டில பெரிதான (வானர) சேனையோடே எழுந்தருளி
சிலையினால், Silaithinaal - சார்ங்கவில்லாலே
இலங்கை தீ எழ செற்ற, Ilankai Thee Ezh Setra - இலங்கை நெருப்புப்பற்றி யெரியும்படி அழித்தவனும்
திருக்கண்ணங்குடியுள் நின்றானை, Thirukkannangudiyul Nindraanai - திருக்கண்ணங்குடியில் எழுந்தருளு யிருப்பவனுமான எம்பெருமான் விஷயமாக;
மலைகுலா மாடம், Malaikula Maadam - மலையென்று கொண்டாடிச் சொல்லத்தக்க மாடங்களை யுடைத்தான
மங்கையர், Mangaiyar - திருமங்கை நாட்டில் உள்ளவர்கட்கு
தலைவன், Thalaivan - தலைவரும்
மானம் வேல், Maanam Veel - சிறந்த வேற்படையை யுடையவருவான
கலியன், Kaliyan - ஆழ்வாருடைய
வாய் ஒலிகள், Vaai Oligal - ஸ்ரீ ஸூக்தியாய்
உலவு, Ulavu - லக்ஷணங்களில் குறையற்றவையான
சொல் மாலை ஒன்பதோடு ஒன்றும், Sol Maalai Onpathodu Ondrum - இப்பத்துப் பாசுரங்களையும்
வல்லவர்க்கு, Vallavarkku - ஓதவல்லவர்களுக்கு
நல்குரவு, Nalkuravu - ஏழைமை
இல்லை, Illai - இல்லையாம்.