திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1759 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஒப்பித்துக் கொண்டு இரா நின்றார் –திரு ஆழியையும் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையும் திருக் கையிலே உடையராய் இரா நின்றார் – ஒப்பனை தான் வேண்டாத படி இரா நின்றது திருத் தோள்களை கண்டவாறே – இவ் வழகு நம்மால் பேசப் போகாது-விஸ்மயப்பட்டு விடும் அத்தனை) 2 | தோடவிழ் நீலம் மணம் கொடுக்கும் சூழ் புனல் சூழ் குடந்தைக் கிடந்த
சேடர்கோல் என்று தெரிக்க மாட்டேன் செஞ்சுடராழியுஞ் சங்குமேந்தி
பாடக மெல்லடியார் வணங்கப் பன் மணி முததொடிலங்கு சோதி
ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-2 | பதவுரை Show / Hideதோடு அவிழ் நீலம், Thodu Avizh Neelam - இதழ்கள் மலரப்பெற்ற நீலோற்பலங்கள் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ -.)) மணம் கொடுக்கும், Manam Kodukkum - பரிமளத்தைப் புற்ப்பட விடுகின்றன சூழ் புனல், Sool Punal - பரந்த தீர்த்தங்களாலே சூழ், Sool - சூழப்பட்ட குடந்தை, Kudandhai - திருக்குடந்தையிலே கிடந்த, Kidandha - திருக்கண்வளர்ந்தருள்கின்ற சேடர் கொல்என்று, Sedar Kolendru - யௌவன புருஷரோ இவர்! என்று தெரிக்கமாட்டேன், Therikkamaatten - தெரிந்து கொள்கின்றிலேன், செம் சுடர் ஆழியும், Sem Sudar Azhiyum - சிவந்த ஒளியையுடை திருவாழியையும் சங்கும், Sangum - சங்கையும் ஏந்தி, Aendi - தரித்துக்கொண்டு, பாடகம் மெல் அடியார் வணங்க, Paadagam Mel Adiyaar Vananga - பாதகடகம் பூண்ட மெல்லி பாதங்களையுடைய பெண்டிர்களால் வணங்கப்பெற்ற பல் மணிமுத்தொடு, Pal Manimuththodu - பலவகைப்பட்ட ரத்னங்களோடும் முத்துகளோடும் இலங்கு சோதி ஆடகம் பூண்ட, Ilangu Sothi Aadagam Poonda - விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய பொன் திருவாபரணங்களை யணிந்துள்ள ஒரு நான்கு தோளும், Oru Naangu Tholum - விலக்ஷணமான நான்கு திருத்தோள்களுமாய் |