திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1760 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான – ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார் கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை – ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ) 3 | வேயிரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம்
தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு
சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி
ஆயிரம் தோளோடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-3 | பதவுரை Show / Hideதோழீ, Thozhi - வாராய்தோழியே!’ (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.)) வேய் இரு சோலை, Veiy Iru Solai - மூங்கில்மயமான பரந்த சோலைகளை யுடைத்தான விலங்கல், Vilangkal - குன்றுகளாலே சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட மெய்யம், Meyyam - திருமெய்ய மலையில் எழுந்தருளியிருக்கிற மணாளர், Manalar - மணவாளப்பிள்ளையும் இ வையம் எல்லாம் தாயின, I Vaiyam Ellam Thaayin - இந்த பூமிப்பரப்பையெல்லாம் தாவி அளந்தவருமான நாயகர் ஆவர், Naayakar Aavar - பரமபுருஷர்போலும் இவர்! தாமரை கண்கள் இருந்த ஆறு, Thamarai Kangkal Irundha Aaru - தாமரை போன்ற திருக்கண்களிருக்கும் படியை என் சொல்வேன்;! சேய் இரு குன்றம், Sey Iru Kuntram - ஓங்கியும் பரந்துமிருக்கின்ற மலைகள் திகழ்ந்தது ஒப்ப, Thigazhnthathu Oppa - விளங்குமாபோலே செவ்விய ஆகி, Sevviya Aagi - அழகுடையனவாய் மலர்ந்த சோதி, Malarndha Sothi - பரந்த தேஜஸ்ஸை யுடையனவான ஆயிரம் தோளொடு, Aayiram Tholodu - ஆயிரம் திருத்தோள்களும் இலங்கு பூணும், Ilangu Poonum - விளங்குகின்ற திருவாபரணங்களுமாய் |