திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1760 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1760பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (ஓங்கி இருப்பதாய் பரந்து இருப்பதான மலை விளங்கினாப் போலே செவ்வையை உடைத்தாய் -மிக்க புகரை உடைத்தான – ஆயிரம் தோளையும் உடையராய்-அத் தோள்கள் தோறும் தோள் வந்தியை உடையராய் இரா நின்றார் கீழே நான்கு தோளும் என்னச் செய்தே ஆயிரம் தோள் என்கிறது ஆயிரம் தோள் ஆனால் கண்டு அனுபவிக்கும் கரணங்கள் அநேகம் கொண்டு அனுபவிக்க வேண்டும் படி இரா நின்றார் -என்கை – ஓர் ஒப்பனை வேணுமோ -அவ்வடிவு அழகு தானே அமையாதோ) 3
வேயிரும் சோலை விலங்கல் சூழ்ந்த மெய்ய மணாளர் இவ்வையம் எல்லாம் தாயின நாயகராவர் தோழீ தாமரைக் கண்கள் இருந்தவாறு சேயிரும் குன்றம் திகழ்ந்தது ஒப்பச் செவ்வியவாகி மலர்ந்த சோதி ஆயிரம் தோளோடு இலங்கு பூணும் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-3
பதவுரை Show / Hide
தோழீ, Thozhi - வாராய்தோழியே!’ (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.))
வேய் இரு சோலை, Veiy Iru Solai - மூங்கில்மயமான பரந்த சோலைகளை யுடைத்தான
விலங்கல், Vilangkal - குன்றுகளாலே
சூழ்ந்த, Soozhndha - சூழப்பட்ட
மெய்யம், Meyyam - திருமெய்ய மலையில் எழுந்தருளியிருக்கிற
மணாளர், Manalar - மணவாளப்பிள்ளையும்
இ வையம் எல்லாம் தாயின, I Vaiyam Ellam Thaayin - இந்த பூமிப்பரப்பையெல்லாம் தாவி அளந்தவருமான
நாயகர் ஆவர், Naayakar Aavar - பரமபுருஷர்போலும் இவர்!
தாமரை கண்கள் இருந்த ஆறு, Thamarai Kangkal Irundha Aaru - தாமரை போன்ற திருக்கண்களிருக்கும் படியை என் சொல்வேன்;!
சேய் இரு குன்றம், Sey Iru Kuntram - ஓங்கியும் பரந்துமிருக்கின்ற மலைகள்
திகழ்ந்தது ஒப்ப, Thigazhnthathu Oppa - விளங்குமாபோலே
செவ்விய ஆகி, Sevviya Aagi - அழகுடையனவாய்
மலர்ந்த சோதி, Malarndha Sothi - பரந்த தேஜஸ்ஸை யுடையனவான
ஆயிரம் தோளொடு, Aayiram Tholodu - ஆயிரம் திருத்தோள்களும்
இலங்கு பூணும், Ilangu Poonum - விளங்குகின்ற திருவாபரணங்களுமாய்