திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1761 | பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் திரு வதரம் இருக்கிற படியை பார்த்தவாறே சிவந்த பவளம் என்னலாம் படி இருந்தது – தேவர் இவர்-இதர விசஜாதியருமாய் இருந்தார்-மனிச்சரோடு கூட்டலாய் இருக்கிறிலர் – இவர் வடிவு இருந்த படியைச் சொல்லில்-எங்கும் ஒக்க ஸ்ப்ருஹநீயமாய் இரா நின்றது – உபமானம் இல்லாத விஷயத்தில்-உபமானம் சொல்லி இருப்போமோ) 4 | வம்பவிழும் துழாய் மாலை தோள் மேல் கையன வாழியும் சங்கும் ஏந்தி
நம்பர் நம்மில்லம் புகுந்து நின்றார் நாகரிகர் பெரிது மிளையர்
செம்பவளம் இவர் வாயின் வண்ணம் தேவர் இவரது உருவம் சொல்லில்
அம்பவளத் திரளேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-4 | பதவுரை Show / Hideதோள் மேல், Thol Mel - திருத்தோள்களிலே வம்பு அவிழும் துழாய் மாலை, Vambu Avizhum Thuzhai Maalai - பரிமளம் விஞ்சுகிற திருத்துழாய் மாலையுள்ளது; ஆழியும் சங்கும், Aazhiyum Sangum - சக்கரமும் சங்கமும் கையன, Kaiyan - திருக்கைகளிலுள்ளன; ஏந்தி, Aendi - (அத்திவ்யாயுதங்களைத்) தரித்துக்கொண்டு நம்பர், Nambar - (இந்த) ஸ்வாமி நம் இல்லம் புகுந்து நின்றார், Nam Illam Pugundhu Nindraar - நம்மனையிலே வந்து ஸுலபராயிரா நி்ன்றார்; நாகரிகர், Naagarikar - பெருமதிப்பராயிரா நின்றார்; பெரிதும் இளையர், Peridum Ilaiyar - மிக்க இளம்பருவமுடையராயிருக்கின்றார்; இவர், Ivar - இவருடைய வாயின் வண்ணம், Vaayin Vannam - அதரத்தின் நிறம் செம் பவளம், Sem Pavalam - சிவந்த பவளமே; தேவர் இவரது, Thevar Ivarthu - அமாநுஷரான இவருடைய உருவம் சொல்லில், Uruvam Sollil - உருவமிருக்கும்படியைச் சொல்வோமாகில் அம் பவளம் திரளேயும் ஓப்பர், Am Pavalam Thiraleeyum Ooppar - அழகிய பவளத்திரள் போலே விரும்பத் தக்கவரா யிரா நின்றார்; |