திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1762 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1762பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (இவர் வடிவு இருக்கும் படியைச் சொல்லப் புக்கால் கடல் போலே இரா நின்றது – பிரதி பஷத்தை கனல் எழக் காய்கிற ஸ்ரீ திரு ஆழியை ஒரு கையிலே ஏந்தி –தமக்கு அடங்காத ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை மற்றைக் கையிலே உடையராய் இருந்தார் – இத்தைச்சொல்லி நம்மால் கரையிலே நிற்கும் அத்தனை அல்லது நம்மால் உள் இழிந்து பேசப் போகாது) 5
கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே யொப்பர் குன்றமன்ன பாழி யம் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம் வாழியரோ விவர் வண்ணம் எண்ணில் மா கடல் போன்றுளர் கையில் வெய்ய ஆழி யொன்றேந்தியோர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-5
பதவுரை Show / Hide
கோழியும், Kozhiyum - உறையூரையும் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.))
கூடலும், Koodalum - தென் மதுரையையும்
கோயில் கொண்ட, Koyil Konda - இருப்பிடமாகவுடைய
கோவலரே ஒப்பர், Kovalare Oppar - கோபாலக்ருஷ்ணன் போன்றிருக்கின்றார் இவர்;
குன்றம் அன்ன, Kundram Anna - மலை போன்ற
பாழி, Paazhi - வலிமை பொருந்திய
அம், Am - அழகிய
ஓர் நான்கு தோளும், Oor Naanthu Tholum - விலக்ஷணமான நான்கு திருத்தோள்களையும்
உடையர், Udaiyar - உடையராயிருக்கின்றார்;
இவர்தம்மை, Ivarthammai - இவரை
பண்டும், Pandum - முன்பொருகாலும்
கண்டு அறியோம், Kandu Ariyom - நாம் பார்த்ததில்லை;
வாழியரோ, Vazhiyaro - பல்லாண்டு பல்லாண்டு; (இவர் வாழ்ந்திடுக.)
இவர் வண்ணம் எண்ணில், Ivar Vannam Ennil - இவருடைய வடிவிருக்கும் படியை நினைக்கப்புக்கால்
மா கடல் போன்று உளர், Maa Kadal Poonru Ular - பெரிய கடல்போலே யிருக்கின்றாரிவர்;
கையில், Kaiyil - ஒரு திருக்கையில்
வெய்ய, Veyya - தீக்ஷ்ணமான
ஆழி ஒன்று ஏந்தி, Aazhi Onru Aendhi - ஒரு திருவாழியை ஏந்தியும் (மற்றொரு திருக்கையிலே)
ஓர் சங்கு பற்றி, Oru Sangu Patri - ஒரு சங்கத்தைத் தரித்துக் கொண்டும்.