திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1763 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1763பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கண்டாரை தம் வசமாக்கி தன் காலிலே விழ விட்டுக் கொள்ள அஞ்சன கிரி போலேயுமாய் இரா நின்றார் – வாக்குக்கு அவிஷயமான விஷயத்தில் நான் எத்தைச் சொல்லுவது) 6
வெஞ்சின வேழம் மருப்பொசித்த வேந்தர் கொல் ஏந்திழையார் மனத்தை தஞ்சுடையாளர் கொல் யான் அறியேன் தாமரைக் கண்கள் இருந்தவாறு கஞ்சனை யஞ்ச முன் கால் விசித்த காளையராவர் கண்டார் வணங்கும் அஞ்சன மா மலையேயும் ஒப்பர் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-6
பதவுரை Show / Hide
வெம் சினம் வேழம், Vem Sinam Vezham - வெவ்விய சீற்றத்தை யுடைய (குவலயாபீட மென்னும்) யானையினது
மருப்பு, Maruppu - கொம்பை
ஒசித்த, Osiththa - முறித்தொழித்த
வேந்தர் கொல், Vendar Kol - பிரபுவோ இவர்!
ஏந்து இழையார், Aendhu Izhaiyar - தரிக்கப்படும் ஆபரணங்களை யுடையரான பெண்டிருடைய
மனத்தை, Manaththai - நெஞ்சை
தஞ்சு உடையாளர் கொல், Thanju Udaiyalar Kol - தஞ்சமாகவுடையவரோ இவர்!
யான் அறியேன், Yaan Ariyeen - நான் அறிகின்றிலேன்;
தாமரை கண்கள் இருந்த ஆறு, Thamarai Kangkal Irundha Aaru - தாமரைபோன்ற திருக்கண்களிருக்கும்படி என்னே!
முன், Mun - முன்பு
கஞ்சன், Kanjan - கம்ஸன்
அஞ்ச, Anja - பயப்படும்படியாக
கால் விசைத்த, Kaal Visaittha - (தனது) திருத்தாள்களின் வலிமையைக் காட்டின
காளையர் ஆவர், Kaalaivar Aavar - இளையவராக இருக்கின்றார்;
கண்டார் வணங்கும், Kandaar Vanangum - கண்டவர்களெல்லாரும் வணங்குதற்குரியவராய்
அஞ்சனம் மாமலை யேயும் ஒப்பர், Anjanam Maamalai Yeyum Oppar - பெரிய வொரு அஞ்சனமலை போன்றிருப்பவரான
ஒருவர், Oruthar - ஒருபெரியவருடைய
அழகிய ஆ, Azhagiya Aa - ஸௌந்தரியமானது
அச்சோ, Achcho - ஆச்சரியம்!.