திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 1765 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
1765பெரிய திருமொழி || (9-2–பொன்னிவர் மேனி) (திரு நாகை) - (தலைவனின் உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (என்னை விலக்கப் பார்க்கிற நீங்களும் வந்து-காணுங்கோள் -உங்களால் தான் விடலாமாகில் – ஸ்ரீ திருவடி திருத் தோளில் இருந்தால் இருக்கும் அழகு தான் இப்படியேயோ) 8
மஞ்சுயர் மா மதி தீண்ட நீண்ட மாலிரும் சோலை மணாளர் வந்து என் நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நின்று நீங்கார் நீர் மலையார் கொல் நினைக்க மாட்டேன் மஞ்சுயர் பொன் மலை மேல் எழுந்த மா முகில் போன்றுளர் வந்து காணீர் அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் அச்சோ ஒருவர் அழகிய வா –9-2-8
பதவுரை Show / Hide
மஞ்சு உயர், Manju Uyar - மேகமண்டலத்தளவும் உயர்ந்ததாய் (- (அச்சோ ஒருவர் அழகிய ஆ-.))
மா மதி தீண்ட நீண்ட, Maa Mathi Theenda Neenda - சந்திரன் படும்படியாக நீண்டிருப்பதான
மாலிருஞ் சோலை, Maalirunj Cholai - திருமாலிருஞ்சோலையி லெழுந்தருளியிருக்கிற
மணாளர், Manalar - மணவாளப்பிள்ளை
வந்து, Vandhu - அவ்விடத்தை விட்டுவந்து
என் நெஞ்சுள்ளும், En Nenjullum - என்னுடைய நெஞ்சினள்ளும்
கண்ணுள்ளும், Kannullum - கண்களினுள்ளும்
நின்று நீங்கார், Ninru Neengaar - நிலைநின்று நீங்கமாட்டா திருக்கின்றார்;
நீர்மலையார் கொல், Neermalaiyaar Kol - திருநீர்மலை யெம்பெருமானோ இவர்! ;
நினைக்க மாட்டேன், Ninaikka Maatten - இன்னாரென்று தெரிந்துணரகில்லேன்;
அம் சிறை புள்ளும் ஒன்று, Am Sirai Pullum Ondru - அழகிய சிறகுகளை யுடைய பெரியதிருவடியின் மீது
ஏறி வந்தார், Eri Vandhaar - ஏறிக்கொண்டு எழுந்தருளியிருக்கிற இவர்
மஞ்சு உயர் பொன் மலைமேல் எழுந்த, Manju Uyar Pon Malaimel Ezhundha - மேகமண்டலத்தளவும் ஓங்கினவொரு பொன்மலையின் மேல் எழுந்த
மா முகில் போன்று உளர், Maa Mukil Poondru Ular - காளமேகம்போன்றிருக்கின்றார்;
வந்து காணீர், Vandhu Kaanir - வந்து ஸேவியுங்கள்;