திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1770 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (நினைக்க ஒண்ணாமை அன்றிக்கே மறக்க ஒண்ணாது -என்கிறது) 3 | ஏது செய்தால் மறக்கேன் மனமே தொழுதும் எழு
தாது மல்கு தடம் சூழ் பொழில் தாழ்வார் தொடர்ந்து பின்
பேதை நின்னைப் பிரியேன் இனி என்று அகன்றான் இடம்
போது நாளும் கமழும் பொழில் சூழ்ந்த புல்லாணியே –9-3-3 | பதவுரை Show / Hideமனமே, Maname - நெஞ்சமே! (- (ஒருவகையாலும் மறக்கமுடிய வில்லையே!;)) ஏது செய்தால், Aethu Seithal - என்னகாரியஞ் செய்தால் மறக்கேன், Marakken - (பெருமானை) மறந்தவளாவேன்? தாது மல்கு, Thadu Malku - பூந்தாதுகள் நிறைந்த தடம் சூழ், Thadam Soozh - தடாகங்களாற் சூழப்பட்ட பொழில், Pozhil - சோலைகளினுடைய தாழ்வர், Thazhvar - பர்யந்தங்களிலே தொடர்ந்து, Thodarnthu - (என்னைத்) தொடர்ந்து கொண்டு பேதை, Pethai - “பேதாய்! இனி பின், Ini Pin - இனிமேல் நின்னை, Ninnai - உன்னை பிரியேன், Priyeen - (ஒருநாளும்) பிரியமாட்டேன்; என்று சொல்லிவைத்து அகன்றான், Akanraan - பிரிந்துபோன பெருமானுடைய இடம், Idam - இருப்பிடமாயும், நாளும் போது கமழும், Naalum Podhu Kamazhum - எப்போதும் பூக்கள் மணநாறப் பெற்ற பொழில் சூழ்ந்த, Pozhil Soozhntha - சோலைகளாற் சூழப்பட்ட புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை தொழுதும் எழு, Thozhudhum Ezhuthu - வணங்குவோம் வா. |