திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1772 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (கீழே மறக்க ஒண்ணாது என்றது இறே-இங்கே நினைக்க ஒண்ணாது என்கிறது – மறத்தல் நினைத்தால் இரண்டாய் இறே இருப்பது-அவை இரண்டும் அரிதாக நின்றது உணரில் -உள்ளம் சுடுமால்–என்கிறது வருந்தி நினைக்கில் என்கிறது இல்லை நினைந்தவாறே நெஞ்சு சுடா நின்றது என்கை) 5 | உணரில் உள்ளம் சுடுமால் வினையேன் தொழுதும் எழு
துணரி நாழல் நறும் போது நம் சூழ் குழல் பெய்து பின்
தணரிலாவி தளரும் என வன்பு தந்தானிடம்
புணரி யோதம் பணில மணி யுந்து புல்லாணியே –9-3-5 | பதவுரை Show / Hideவினையேன், Vinaiyen - பாவியான நான் (- (தோழீ!) தொழுதும் எழு-;) உணரில், Unaril - நினைத்தமாத்திரத்தில் உள்ளம் சுடும், Ullam Sudum - நெஞ்சு வேம்; ஆல், Aal - அந்தோ! ; துணரின் நாழல் ஈறு போது, Thunarin Naazhal Eeru Podhu - பூங்கொத்துக்களை யுடைத்தான நாழலின் மணம் மிக்க புஷ்பங்களை நம் சூழல், Nam Soozhal - நமது பரந்த கூந்தலிலே பெய்து, Peidhu - சூட்டி பின் தணரில் ஆவிதளரும் என அன்பு தந்தான், Pin Thanaril Aavithalarum Ena Anbu Thandhan - ;இனி விட்டுப் பிரிந்தால் உயிர் தடுமாறிப் போகும்; என்னும்படியான அன்பைக் கொண்டிருந்து (விட்டுப் பிரிந்த) பெருமானுடைய இடம், Idam - உறைவிடமாயும் புணரி ஓதம், Punari Otham - கடலலைகளானவை பணிலம், Panilam - சங்குகளையும் மணி, Mani - ரத்னங்களையும் உந்து, Undhu - ஒதுக்கித் தள்ளுமிடமாயுள்ள புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை |