திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1773 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் நித்ய வாஸம் பண்ணாத இடத்தில் நினைக்கவும் அரிது அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் காயிக வியாபாரமும் பண்ணக் குறை இல்லை – வள்ளல் –சம்ஸ்லேஷ சமயத்தில் தன்னை எனக்கு சர்வ ஸ்வாதானம் பண்ணினவன் – மாயன் – இப்போது முறை கெட்டுத் தான் இருந்த இடத்தே செல்ல வேண்டும்படி அப்போது அப்படி பரிமாறினவன் மணி வண்ணன் – இவை ஒன்றுமே இல்லை யாகிலும் விட ஒண்ணாத படியான வடிவு அழகை உடையவன் – எம்மான் –அவ் வடிவு அழகை காட்டி என்னை அனந்யார்ஹனாக எழுதிக் கொண்டவன்) 6 | எள்கி நெஞ்சே நினைந்து இங்கு இருந்தென் தொழுதும் எழு
வள்ளல் மாயன் மணி வண்ணன் எம்மான் மருவும் இடம்
கள்ளவிழும் மலர்க்காவியும் தூ மடல் கைதையும்
புள்ளும் அள்ளல் பழனங்களும் சூழ்ந்த புல்லாணியே –9-3-6 | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenjee - மனமே! நினைந்து, Ninaindhu - (அவனைச்) சிந்தித்து எள்கி, Elgi - ஈடுபட்டு இங்கு இருந்து என், Ingu Irundhu En - இங்கேயிருப்பதனால் என்ன பலன்? வள்ளல், Vallal - உதாரனும் மாயன், Maayan - ஆச்சர்யச் செய்கைகளையுடை யவனும் மணிவண்ணன், Manivannan - நீலமணிபோன்ற நிறமுடையவனுமான எம்மான், Emman - எம்பெருமான் மருவும் இடம், Maruvum Idam - விரும்பியுறையுமிடமாயும், கள் அவிழும் மலர்காவியும், Kal Avizhum Malarkaaviyum - மது ஒழுகுகின்ற மலர்களையுடைய செங்கழுநீர்களும் தூ மடல் கைதையும், Thoo Madal Kaithaiyum - வெளுத்தமடல் களையுடைய தாழைகளும் புள்ளும், Pullum - பலவகையான பறவைகளும் அள்ளல் பழனங்களும், Allal Pazhanangalum - சேறுமிக்க வயல்களும் சூழ்ந்த, Soozhndha - சூழ்ந்திருக்கப் பெற்றதாயுமுள்ள புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியை தொழுதும் எழு, Thozhudhum Ezhuthu - தொழுவோம் வா, |