திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 1774 | பெரிய திருமொழி || (9-3–தன்னை நைவிக்கிலேன்) (திரு புல்லாணி 1) - (தலைவனை பிரிந்த தலைவி ஆற்றாமை மிகுதியால் தலைவனிடம் செல்லத் துணிந்து நெஞ்சையும் தோழியையும் துணை வேண்டிக் கூறுதல்) - (ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை) (அவன் ருசி முன்னாக -இத்தலை ருசி பண்ணும் அன்று இறே பலத்தோடே வ்யாப்தம் ஆவது – அவனுடைய ருசி இறே பேற்றுக்கு உடலாக தலைக் கட்டுவது – இவனுடைய ருசி அவனுடைய விரகத்துக்கு உடலாம் இத்தனை இறே) 7 | பரவி நெஞ்சே தொழுதும் எழு போயவன் பாலமாய்
இரவு நாளும் இனிக் கண் துயிலாது இருந்து என் பயன்
விரவி முத்தம் நெடு வெண் மணல் மேற்கொண்டு வெண் திரை
புரவி என்னப் புதம் செய்து வந்து யுந்து புல்லாணியே –9-3-7 | பதவுரை Show / Hideநெஞ்சே, Nenjee - மனமே! இனி, Ini - இப்போது இரவும் நாளும், Iravum Naalum - இரவும் பகலும் கண்துயிலாது இருந்து என்பயன், Kanthuyilaadhu Irundhu Enpayan - (கண்ணுறங்கா திருப்பதனால் என்ன பயன்? முத்தம், Muththam - முத்துக்களோடே விரவி, Viravi - கலந்து நெடு வெண்மணல், Nedu Venmanal - அதிகமான வெண்மணற்களை மேல் கொண்டு, Mel Kondu - மேலே எறட்டிக்கொண்டு வந்து வெண் திரை, Ven Thirai - வெளுத்த அலைகள் புரவி என்ன, Puravi Enna - குதிரை போல புதம் செய்துவந்து, Pudham Seithuvandu - தாவிக்கொண்டு வந்து தள்ளுமிடமான புல்லாணி, Pullaani - திருப்புல்லாணியிலே அவன் பாலம் ஆய் போய், Avan Paalam Aay Poi - அவ்வெம்பெருமான் பக்கல்ஈடு பட்டோமாய்ச் சென்று பரவி தொழுதும், Paravi Thozhudum - துதிந்து வணங்குவோம் வா, எழு |